Thursday 29 December 2011

பிரபல பெண் டிவிட்டரின் பார்வையில்...

 

பிரபல பெண் ட்விட்டர் அனு அவர்களின் பார்வையில் இன்றைய உலகம். அவரின் மனம் திறந்த வெளிப்படையான பதில்களை இங்கே காணலாம்.

1)   உலகம் உங்களை எவ்வாறாக அறியப்படவேண்டுமென விரும்புகிறீர்கள்?
               நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையாய்....பாரதியின் புதுமைப்பெண்போல் இருக்கத்தான் ஆசை . 
2)  உங்களுக்கு பிடித்த உலகம் எவ்வாறாக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?
    பொய், புரட்டு, ஊழல் இல்லாத நேர்மையான சமுதாயமாக.
 
3)      உங்களுடைய கடந்தகால நினைவுகளில் முக்கியமானவை?
     என் இனிய தோழிகளுடன் பழகிய கல்லூரி வாழ்க்கை . 
 
4)      நீங்கள் வெகுகாலமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் காரியம்?
        ம்ம்ம்...அப்படி எதையும் அதிகமாக எதிர்பார்ப்பதில்லையே. 
 
5)      வாழ்க்கை பற்றிய உங்களது தத்துவம்?
         வாழ்க்கை இனியதுதான். அது இனிமையாவதும், சுமையாவதும் நம் கையில்   தான் இருக்கிறது என்பது உண்மைதான்.
 
6)      ட்விட்டருக்கு நீங்கள் வந்ததன் நோக்கம்? அது கிடைத்ததா?
         ம்ம்ம் ட்விட்டர் மிக பிரபலமானதால் இதில் இணையும் எண்ணம் வந்தது. 
 
7)     பெண் ட்விட்டர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை? 
            அறிவுரை கூறுமளவிற்கு  எனக்கே அனுபவம் இல்லை இங்கே .

8)     ஒரு பெண் ட்விட்டராக நீங்கள் சந்தித்த சிறந்த, மோசமான ட்விட்டர் தருணங்கள்?
           சிறந்த தருணங்கள்...இங்கு சில நல்ல தோழமைகள் கிடைத்தைச் சொல்லலாம். மோசமான தருணங்கள்  இங்கும் சில மனிதம் இல்லாத மனிதர்களைக் காணும்போது .    
             
9)     ஆண் ட்விட்டர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
         ஆண்களுக்குச் சொல்லும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை .

10)   பொதுவாக ட்விட்டர் பற்றிய உங்களது ஆராய்ச்சி முடிவு?
         விஷயங்களைப் பகிர்வதில் மிக அருமையான தளம் .



11)   உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு?
         புத்தகங்கள், இசை, ஓவியம், கவிதை...இந்த வரிசையில் இப்போது கணிணியும்.


12)   ஒரு நாளிற்கான உங்களது செயல்களை விளக்கவும்?
        ----


13)   வெளியே சுற்றுவது/வீட்டில் இருப்பது இவற்றில் நீங்கள் அதிகம் விரும்புவது?
       சுற்றுலா செல்வது, பார்க்காத இடங்களை, அதன் சிறப்பியல்புகளோடு பார்ப்பது பிடித்தமான விஷயம் .

14)   தூக்கம் பற்றிய உங்கள் கருத்து?
         தூக்கம்.......மனிதனுக்கு சரியான அளவில் தினமும் தேவைப்படும் ஓய்வு .   சாவுக்கான ஒத்திகை என்றும் சொல்லலாம் .

15)   காதல் பற்றிய உங்களுடைய செய்தி?
         ஆழ்மனதில் தோன்றும் பரிசுத்தமான நேசம். இதைக்கொச்சைப்படுத்துபவர்கள் நரகத்திற்குச் செல்லக்கடவது !

16)   ஆண் பெண் நட்புகளின் வரைமுறையாக நீங்கள் குறிப்பிடுவது?
         வரைமுறை அவரவரின் மனதிற்குத்தான் தெரியவேண்டிய விஷயம் .
17)   பெண்களின் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பவைகள்?
          சில நேரம் பெண்களேதான். அவர்களது நுட்பமான மனத்தடைகள்.

18)   இன்றைய காளையர்க்கும் வனிதையர்க்கும் உங்களின் வழிகாட்டுதல்?
        வழிகாட்டும் அளவிற்கு நான் ஒன்றும் வளரவில்லையே :(

19)   பெண்விடுதலை, கருத்து சுதந்திரம், சமுதாயத்தின் மரியாதை பற்றி?
        பெண்விடுதலை இன்னும் ஆண்களின் கையில் இருப்பதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை.
         மற்றவரை பாதிக்காத கருத்துகளுக்கு எப்போதும் சுதந்திரம் தான் இங்கே :)
         சமுதாயத்தின் மரியாதை ஒருவரிடம் இருக்கும் செல்வத்தை மட்டுமே அளவிடுகிறது.. அவர்களின் மனதை பார்த்து அளவிடும்போதுதான் அது நிஜமான மரியாதையாக இருக்கும் .

20)   பெண்களை கவர 4 டிப்ஸ்?
     உண்மையாக இருப்பதும், உரிய மரியாதை கொடுப்பதும், ஒரு விஷயத்தை பிரச்னையை சமாளிக்கும் பக்குவமும், நாகரிகமாக இருப்பதும்,  எப்போதும் பெண்களைக் கவரும்.

21)   ஆண்களிடம் எதிர்பார்க்கும் 4 நல்ல குணங்கள்? வெறுக்கும் 4 கெட்ட குணங்கள்?
        மேலே சொன்னவையே எதிர்பார்க்கும் குணங்கள்.
         வெறுப்பவை இதற்கு எதிர்ப்பதங்கள் தான் :)))

       (ஒரே கேள்வி ரிபீட் அடிக்கறீங்களே சாரே :( (கலாய்ச்சிட்டாங்களாமாம்! )


22)   செல்போன், கம்ப்யூட்டர், வெளியூர் வேலை போன்றவற்றால் குடும்பம், சொந்தம், நட்பு போன்றவை அடைந்த நிலை?
         நட்பும், சொந்தமும் இந்த தொடர்புசாதனங்களால் வளரத்தான் செய்கிறது. 
குடும்பத்திற்குச் செலவிட தான் நேரம் கிடைப்பதில்லை நமக்கு :(

23)   ஜெயலலிதா, சோனியா காந்தி... தலைமைப் பண்புகளாக நீங்கள் காணும் குணங்கள்?
       ஜெயலலிதாவின் தைரியம், துணிச்சல், அறிவுக்கூர்மை - நிச்சயமாக இவையாவும் தலைமைப்பண்புகள்தான்.
மற்றவரிடம் அத்தகைய பண்புகள் எதையும் காணவில்லை - மன்னிக்கவும் !

24)   ஒரு ஞான குருவாக நீங்கள் உலகத்துக்கு சொல்லவிரும்பும் மற்ற செய்திகள்?

 மன்னிக்கவும் :)



நீதி: போய் பிள்ளைகுட்டிய படிக்க வையுங்கடா!

Monday 26 December 2011

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்!



ஊர்கூடித் தேர் இழுப்போம் என்பதே ஊரை ஒன்றாக்கத்தான். தேரை இழுப்பதற்காக சொல்லப்படுவதல்ல. ஆனால் ஊர்கூடிச் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்கள் மிகச் சொற்பமானவையே!

ஊர் ஓட சேர்ந்து ஓட வேண்டும்! என்ற பழமொழி மட்டுமே இன்று அதிகம் பின்பற்றப்படுகிறது. திரும்பி நில்! துணிந்து செல்! எதிர்த்துப் போரிடு! என்பவையெல்லாம் எவர் காதுக்கும் எட்டுவதில்லை! இதை கண்கூடாக காண விரும்புவோர் இணையதளங்களில் நிகழும் முல்லைப் பெரியார் அணை பற்றிய விவாதங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள்.

போராட்டம் என்பது ஜனநாயக உரிமையேயன்றி, சட்ட விரோதச் செயல் அல்ல என்பதே மெத்தப்படித்த பலருக்குப் புரிவதில்லை. போராளிக்கும், தீவிரவாதிக்கும் வித்தியாசங்களை இவர்களுக்கு சொல்லித்தராத நம் தமிழ்த்தாத்தாக்களையே முதலில் சாட வேண்டும். போராட்டம் என்றால் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு காட்டு வழியே ஒழிந்து திரிந்து வாழ்பவர்களுக்கான ஒரு இனச்சொல் என்று இவர்களின் மூளைதான் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கவேண்டும்.

ஒரு நாட்டின் வரலாற்றில் புரட்சி என்பது எத்தனை முக்கியமானதொரு சடங்கு என்பதை இந்தக்கால இண்டர்நெட் தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். இவர்களுக்குத் தான் இரவைப் பகலாக்க பல வளைத்தளங்கள் நவரச விருந்து படைத்துக்கொண்டிருக்கின்றனவே!

முல்லைப்பெரியார் அணைப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, ஈரோடு, கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சென்னை என அனைத்து மாவட்ட மக்களும் தங்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்திய விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. போராட்டக்காரர்களின் பங்கு ஒருபுறமிருக்க வணிகர்களும், பொதுமக்களும் இதில் ஒத்துழைத்த விதம் நம் மக்களிடம் இன்னும் அந்த பேராண்மை தீர்ந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன.

இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் “எங்களோட இந்த வருஷ வெள்ளாமை வெளையலன்னு நெனச்சிக்கிறோம்! எங்க பிள்ளைகுட்டிகளெல்லாம் பிற்காலத்துல நல்லா இருக்கணும்ங்கிறதுக்காக” என்று சொன்ன விவசாயியின் உணர்வில் தெரிவது அவனுடைய பெருந்தன்மை மட்டுமல்ல அவனின் பொதுநலப் பொறுப்பும் ஆகும்.

இவ்வாறு ஒரு மறுமலர்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு ரூபங்களில் பங்களித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை சமர்ப்பிப்பதோடு இந்த மாற்றத்தை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து உங்கள் பெருங்குணத்தை உலகிற்கு பறைசாற்றிட வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
"Great works are performed, not by strength, but by perseverance." Samuel Johnson 

இப்படிக்கு




இறுதியாய் ஒரு வரம்!

 ஒழுகாத வானம்
தகிக்காத பூமி
சுழிக்காத காற்று
சுடரொளிச் சூரியன்
விரட்டாத மழை
வீதியெல்லாம் நிழல்
...இவையாவும் வேண்டேன்!

நொடிப் பொழுதேனும்
பயக்குறி நீக்கி
விழித்திரை மூட
வீடொன்றன்றி வேறென்
கேட்பேன் பராபரமே!

Saturday 10 December 2011

உள்ளூர் தெய்வங்கள் - 2

இந்த பதிவு என் சொந்த ஊரைப் பற்றியது. எங்கள் பகுதியில் தந்தை பிறந்த ஊரையே சொந்த ஊராக சொல்லிக்கொள்வோம்(பூர்வீகம்).

எங்கள் ஊரில் இந்து என்ற வார்த்தையோ கடவுள் என்ற வார்த்தையோ பாடப்புத்தகத்தின் வாயிலாகவே நுழைந்திருக்கும். அதுவரை எங்கள் ஊரை காப்பது, எங்களுடன் எப்போதும் துணையாக நிற்பது எங்கள் முன்னோர்கள் நிறுத்திச் சென்ற இந்த நடுகல் நம்பிக்கைகள்(ல்) தான்.

ஊரின் மத்தியில் ஒரு மந்தையம்மன். அடுத்து ஒரு சங்கிலி கருப்பு. அவ்வளவுதான்.

ஊரில் நிலைத்து வாழ மந்தையம்மனின் தயவு வேண்டும். மந்தையம்மன் என்றும் வேறு வேலைகளுக்கு வருவதில்லை. அது ஊரைக்காக்கவும், ஊருக்குள் இருப்பவர்களை மேற்பார்வையிடவுமே அதற்கு நேரம் சரியாக இருக்கும். அதற்கு நன்றிக்கடனாக வருடத்தில் ஒரு நாள் பங்குனி மாசத்தில் ஊரே வரி போட்டு கோலாகலமாக பொங்கல் வைத்து முளைப்பாரி, கரகம், மஞ்சத்தண்ணி சகிதம் கொண்டாடி மகிழும்.

சங்கிலிக் கருப்புக்கு அந்த வேலை கிடையாது. கருப்பன் ரொம்ப துடியானவன். அவனை அப்படியே விட்டா ஊரையெ அழிச்சுபுடுவான்னு நாலுபக்கமும் சங்கிலியால கட்டி ஆறடி ஆழத்துக்கு புதைச்சு தலை மட்டும் மேலே தெரியிற மாதிரி நிக்க வச்சு கும்பிடப் படுற நீண்ட நெடு நடுகல் நாயகன் தான் சங்கிலி கருப்பன்.

கருப்பன் குடும்ப உள்ளூர் நடப்புகளை கவனிப்பவன் அல்ல. அவன் வெளியூர் செல்பவர்களுக்கு துணைக்கு செல்வதும், வெளியூர்காரர்களை ஊருக்குள் வர விடாமல் தடுக்க துணை நிற்கும் காவல் காரன் தான்.

கருப்பனுக்கு பெண்கள் ராத்திரியில் சுத்துவது ஆகாது. ஊர் சொத்தை திங்க நினைப்பவர்களும் ஆகாது. இவையெல்லாம் கருப்பன் நேரடியா வந்து செய்கிறானா இல்லை கருப்பன துணைக்கி வச்சுகிட்டு அவனோட வாரிசுகள் இதச்செஞ்சாய்ங்களான்னு தெரியாது. ஆனா இத்தனை வருசமா இந்த ஊர கட்டிகாப்பாத்தி, எவனையும் அனாவசியமான காரியத்தனம் பண்ணவிடாம காப்பாத்தி வந்திருக்கிறான்.

இன்று என் தலைமுறையில் தான் இவர்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. பல காலமாக கட்டுண்டு கிடந்த இவர்களுக்கு ரிட்டைர்டுமெண்டு கொடுத்து விட்டு பெருந்தெய்வ சிலைகளை கொண்டுவந்து சுற்றிலும் சுவரமைத்து முன்னால் மிடுக்காக ஒரு கிரில் கேட் வைத்து சொகுசாக உள்ளே உக்கார வைத்து கும்பிட துவங்கி விட்டோம். ஆமாம், எல்லாம் ஆகம விதிப்படிதான்!

உள்ளூர் தெய்வங்கள் - 1

இப்போது இதை எழுத காரணம், வரும் திங்கட்கிழமையன்று, எங்கள் அம்மா வழி தாத்தா ஊரில் அம்மன் சிலை வைத்து குடமுழுக்கு விழா நடத்துகிறார்கள். இத்துடன் இத்தனை வருடங்களாக காத்துவந்த எங்கள் சொந்த தெய்வமான மந்தையம்மனை வெறியேற்றிவிட்டு காளியம்மனை கொண்டுவந்து வைக்கிறோமே என்ற ஒரு குற்ற உணர்ச்சியின் காலப்பதிவே இந்த கல்வெட்டு(ப்ளாக் பேஜ்)

மந்தை அம்மன் என்ற ஒன்று இந்த பகுதி மக்களின் ஒரு வகை வழிபாட்டுத்தெய்வம். அதாவது மக்கள் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு இடங்களில் தங்கள் குடியிருப்பை அமைத்துக்கொள்ளும் போது, அந்த கூட்டத்திற்கு அல்லது அந்த மந்தைக்கு இடமளித்து காப்பாற்றவேண்டி, அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த லோக்கல் சூப்பர் நேச்சுரல்/ஆதிமுதல் ஓனருக்கு பயந்து பயபக்தி கலந்த மரியாதையின் வெளிப்பாடு தான் இந்த மந்தை அம்மன். இது பிற்காலங்களில் தெய்வம் என்ற சொல்லால் பிறரிடம் கம்யூனிகேட் செய்ய சொல்லித்தரப்பட்டது.

இதுநாள் வரை இத்தகைய தெய்வங்களுக்கு தனி உருவமென்பது கிடையாது. அந்த பகுதியிலேயே கிடைத்த ஏதாவது ஒரு நீட்ட கல்லோ அல்லது முக்கோண வடிவிலான உருவம் போன்ற கல்லோதான் வணக்கத்திற்குரியதாக வைக்கப்பட்டிருந்தது. வருடத்திற்கு ஒரு முறை பங்குனி மாசத்தில் இவ்வகை தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுவதே அந்த மந்தையில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாவாக இருந்தது. இந்த தெய்வங்களுக்கென்று உண்டியல் கிடையாது, தனி(டெடிகேட்டட்) பூசாரி கிடையாது. மக்களோடு மக்களாக அவைகளும் எல்லாச் சண்டைகளிலும் பங்குபெற்று வசவு வாங்கியோ, சாட்சியாகவோ அல்லது பிற்காலத்தில் தண்டணை வழங்கும் ஊர் பெரியவராகவோ வாழ்ந்து கொண்டிருந்தது.

காலங்கள் உருண்டோடின. சைவ, வைணவ, சமண, புத்த, முகலாய, கிருத்துவ....இன்ன பிற மதங்களின் நேரடித்தாக்குதலில் அழியாத இந்த உள்ளூர்காரி இன்று தன் சொந்த மக்களால் முதுகில் குத்தப்பட்டு தூக்கி வெளியே வீசப்படும் நிலை வருமென்று யாரும் அவளுக்கு சொல்லவில்லை.

இன்றைய தலைமுறைக்கு கைக்குள் அடங்காத அளவு பணமும், மூளைக்கு மேல் உள்ள முடியும் சிந்திக்கும் அளவு அறிவும் வந்ததன் பலன், மந்தையம்மன், காளியம்மனின் மறு உருவமென்றும், இத்தனை நாள் வசதியில்லாததால், உருவமற்று கஷ்டப்பட்டாள் என்றும், அவளுக்கு புனர்ஜென்மமளித்து, இன்று அவளுக்கு உருவமளித்து, நல்ல கோயில் அமைத்து, அதற்கு சாஸ்திர சம்பிரதாயப்படி(?) பெருந்தெய்வ புரமோசன் கொடுத்திருக்கிறார்கள்.

இதை தட்டிக்கேட்க அவளுக்கு தைரியமில்லை, அவளுக்கு துணை நின்று இதை தடுத்து நிறுத்த எனக்கு நெஞ்சுரமுமில்லை.

நான் இன்று இதை எழுதுவதற்காக இத்தனை ஆயிரம் வருஷங்களாக என் வம்ச மூதாதையரை எல்லாம் காற்றிலும் மழையிலும் நோய் நொடிகளிலும் போர் பிரளயங்களிலுமிருந்து காத்ததன் பலனை இந்த ஒரு ப்ளாக் பேஜ் எழுதி விட்டு கையை தட்டிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு என் கடன் தீர்ந்த திருப்தியுடன் என் பொழப்பை பார்க்கச் செல்கிறேன்!

Wednesday 7 December 2011

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

இதெல்லாம் பார்த்தா தொழில் பண்ணமுடியுமா! நீங்க வாங்க பாஸ்! இவய்ங்க எப்பவுமே இப்படித்தான்!

டேய்! எவனாவது எங்க சங்கு சாங்கியத்த பத்தி தப்பா பேசுனீங்க......

குருபீடம்!

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

-கணியன் பூங்குன்றன்
(பாடல்192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு) 


 English Translation

"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."

Kanniyan Poongundran in Purananuru,
Poem 192 - written in Tamil 2500 years ago
English Translation by Rev. G.U.Pope in Tamil Heroic Poems

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
http://www.pattukkottaiyar.com/site/
http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html

பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி (1959)
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

வாரணம் நூறு!

             சங்க இலக்கியத்தில் யானைக்கு வழங்கப்பட்ட பெயர்கள் >100            


யானை
வேழம்
களிறு -ஆண்யானை
மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
பிடி - பெண்யானை
கரி
வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
அத்தி - (பிங்கல நிகண்டு)
அத்தினி
அதவை - போர் யானை
அரசுவா
அல்லியன்
அனுபமை
ஆம்பல்
ஆனை 

இபம் - திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
இரதி
இராசகுஞ்சரம் / குஞ்சரம்
இருள்
தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
வல்விலங்கு
மாதங்கம்
உம்பல் - சான்று
உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)

கலபம்

அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)

அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை

உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை

எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)

ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை

ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.

கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.

கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.

ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)

கசேந்திரன் - சிறந்த யானை.

குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.

கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)

ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.

ஓங்கல் - யானை. (அக. நி.)

கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)

கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)

கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).

கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)

கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)

கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)

கருமா -

கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )

கள்வன் - பிங்கல நிகண்டு

களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)

கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)

கஜம் = கெசம்

காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)

கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)

கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)

குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)

கும்பி - (திவாகர நிகண்டு)

குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)

குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).

கைம்மலை - கையை உடைய மலை(அக. நி.)

நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)

கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).

கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)

சத்திரி - யானை. (சங். அக.)

சாகசம் - யானை. (அக. நி.)

சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)

சிந்துரம் - (சூடா.)

சுண்டாலம் - (யாழ். அக.)

சூகை - (அக.நிக)

தந்தாயுதம்

தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).

தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.

தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.

தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை

தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)

திண்டி - (அக.நிக)

தீர்க்கமாருதம் - (யாழ். அக.)

தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)

தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)

துருமாரி - (யாழ். அக.)

துவரிதழ் - (அக.நிக)

துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)

தூங்கல் - (திவாகர நிகண்டு)

தெட்டி - (அக.நிக)

தெள்ளி - (அக.நிக)

நகரகாதம் - (யாழ்.நிக)

நகரசம் - (யாழ்.நிக)

நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)

நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)

நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.

நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)

நூ - (அக.நிக)

நூழில் (சூடாமணி நிகண்டு)

நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).

பகடு - பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5)
பஞ்சநகாயுதம்
பஞ்சநகம்
பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
பண்டி (அக.நி.)
பவளக்கொம்பன்
பிக்கம்= யானைக்கன்று (யாழ். அக.)
பிணிமுகம்
பிரளயம்

பிள்ளுவம்

பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை

புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)

பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)

புழைக்கை - (திவாகர நிகண்டு)

பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).

பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).

பெருமா - (பிங்கல நிகண்டு)

பென்னை - (சங். அக.)

பேசகி - (சங். அக.)

பேசிலம் - (யாழ். அக.)

பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)

போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)

மகாகாயம் - (யாழ். அக.)

மகாதந்தம் - (யாழ். அக.)

மகாநாதம் - (யாழ். அக.)

மகாமிருகம் - (யாழ். அக.)

மத்தகுணம் - (யாழ். அக.)

மதங்கம் - (யாழ். அக.)

மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)

மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)

மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).

மதமா - (பிங்கல நிகண்டு)

மதவிருந்தம் - (யாழ். அக.)

மதாரம் - (யாழ். அக.)

மதாவளம் - (பிங்கல நிகண்டு)

மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)

மந்தமா - (சூடாமணி நிகண்டு)

மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)

மருண்மா - (திவாகர நிகண்டு)

மறமலி - (திவாகர நிகண்டு)

மா - (அக.நி.)

மாதிரம் - (பிங்கல நிகண்டு)

முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.

மையன்மா - (இலக். அக.)

மொய் - (பிங்கல நிகண்டு)

யாளி - (அக.நி.)

யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)

யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)

யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)

வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)

வராங்கம் - (யாழ். அக.)

வருணம் - (யாழ். அக.)

வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)

வழுவை - (சூடாமணி நிகண்டு)

வியாளம் - கெட்டகுணமுள்ள யானை

விராணி - (சங். அக.)

வேதண்டம் - (பொதி. நி.)

அருணம் - (அக. நி.)

அழுவை - (அக. நி.)

அறுகு - ((பொதி. நி.)

இமழி - (அக. நி.)

உத்தரி - (அக. நி.)

ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)

ஏரம்பம் - (நாமதீப.)

ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)

கரமை - (சங். அக.)

களம் - கொம்பில்லா யானை

கேழல் - (அக. நி.)

சூர்ப்பகன்னம் - (அக. நி.)


கோனாரின் மாணவனின் உரை!

சென்னைத் தமிழ் அருஞ்சொற்பொருள்!







கொச்சைச்சொல் சரியான சொல்

அட மழை ... அடைமழை
தாவாரம் ... தாழ்வாரம்
முழுங்கு ... விழுங்கு
அவைகள் ... அவை
கடப்பாறை ... கடப்பாரை
கத்திரிக்காய் ... கத்தரிக்காய்
கைமாறு ... கைம்மாறு
கோடாலி ... கோடரி
தலக்காணி ... தலையணை
இடது பக்கம் ... இடப்பக்கம்
புஞ்சை ... புன்செய்
பதட்டம் ... பதற்றம்
நோம்பு ... நோன்பு
ஒருவள் ... ஒருத்தி்
அருகாமையில் ... அருகில், அண்மையில்
அதுகள் ... அவை
வெண்ணீர் ... வெந்நீர்
சிகப்பு ... சிவப்பு
பண்டக சாலை ... பண்டசாலை
புண்ணாக்கு ... பிண்ணாக்கு
ரொம்ப ... நிரம்ப
வத்தல் ... வற்றல்
பேத்தி ... பெயர்த்தி
பேரன் ... பெயரன்
வலது பக்கம் ... வலப்பக்கம்
கடக்கால் ... கடைக்கால்
ஊரணி ... ஊருணி
பாவக்காய் ... பாகற்காய்
சாணி ... சாணம்
திருவாணி ... திருகாணி
சீயக்காய் ... சிகைக்காய்
சுவற்றி்ல் ... சுவரில்
முயற்சித்தார் ... முயன்றார்
எண்ணை ... எண்ணெய்

Tuesday 29 November 2011

இந்தியா ஒழிகிறது?

 இனிமேல் எவனாவது ஆந்திராகாரய்ங்கள கொல்டீன்னீங்க, தக்காளி கொன்னேபுடுவேன்! எம்புட்டு அறிவு!

 ஹலோ! இசையருவி .......மேடமா? நீங்க அநியாயத்துக்கு அழகாருக்கீங்க மேடம், ஒங்க குரல் அப்டியே என்ன தூங்கவிடாம பண்ணுது! இந்த 3 படத்துல இருந்து ஒய் திஸ் கொலவெறி சாங் வேணும் மேடம். டெடிகேசனா? ஆல் கபாலீஸ்ன்னு சொல்லுங்க அல்லாருக்கும் பிரியும்!
 என்னைக்கு ராமன் செருப்ப கழட்டி குடுத்துட்டு காட்டுக்கு போனானோ, அன்னைக்கிருந்து இதோட மதிப்பு ஏரிப்போச்சுயா!


 டேய்! டேய் டேய்! இருங்கடா! கெழவிய பத்தி தப்பா நெனச்சுராதீங்கடா! அந்த ஆட்டுகுட்டிக்கு ஆட்டோகேட் சொல்லிகுடுத்துகிருக்குடா! எங்கன்னு கேக்குரியா? ஆண்டிபட்டியிலதேன்! வேணும்னா ஆண்டிபட்டிக்கு போயி ஆட்டுக்கார அலமேலு அப்பத்தான்னு கேட்டுபாருங்களேன்!!!!




  நமக்கெதுக்கு வீண் வம்பு! ஏம்பா, அடுத்த ட்ரெய்ன் இந்த ரூட்ல எத்தனை மணிக்கு!



நான் அப்பவே சொல்லல! ரஜினிய ஆட்டோ ஓட்டவிட்டா இப்டியெல்லாம் நடக்கும்னு!

Saturday 26 November 2011

கட்டுனா இவளக்கட்டனுன்டா!

சொக்கா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சில்லறை வணிகத்தில் FDI

சில்லறை வணிகத்தில் FDI என்ற அறிவிப்பை கேட்டவுடன் யாரும் அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கவேண்டாம். இது ஒரு வகையில் அன்றாடம் பேப்பர் பொருக்கி வயிறு வளர்க்கும் கடைசி குடிமகன் வரை பாதிக்ககூடிய ஒன்று. எனக்கு தெரிந்த சில உண்மைகளை பகிர்கிறேன். ஆதரவு எதிர்ப்பு கருத்துகளை எதிர்பார்த்துதான்!

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் இடைதரகர்களிடமிருந்து விவசாயிகளையும், நெசவாளர்களையும் மற்ற பிற சிறுதொழில் வல்லுநர்களையும் காப்பாற்றி அவர்களுக்கு நேரடி கொள்முதல் மூலம் நல்ல விலை கிடைக்கச்செய்ய முடியுமென்ற கருத்தை முன்னிருத்தியே அரசாங்கம் இதை அனுமதித்திருப்பதாக சொல்லி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இதே போல் சில கார்பரேட் நிறுவனங்கள் இந்த சில்லரை வணிகத்தில் கால் பதிக்கத் தொடங்கியபோது அவர்கள் சொன்ன அதே கருத்துதான் மேலே நம்மிடம் அரசாங்கம் சொன்னது. அவ்வாறு இறங்கிய கார்பரேட்களில் முக்கியமானவை, ITC - Choupal Fresh, Reliance - Fresh, More, Safal Market.... etc., இவற்றில் ஒன்றில் வேலை பாலிசி மேக்கிங் லெவலில் வேலை பார்த்த அனுபவத்தில் அவற்றின் படிப்பினைகளைத்தான் இங்கே சொல்ல முயன்றிருக்கிறேன்.


                     * விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதில் கார்பரேட் யுக்தி என்னவென ஒரு சான்றை இங்கே பார்க்கலாம். தக்காளி கொள்முதல் செய்வதற்காக கிராமங்களுக்கு சென்று வர ஒரு ஆபிசர் இருப்பார். அவர் விவசாயிகளை தெரிந்து வைத்துகொண்டு அவர்களிடம் ஒரு விலையை பேசி அவற்றை ஒருங்கினைத்து வரும் வண்டியில் ஏற்றி, குடவுனுக்கு அனுப்பி விடுவார். அங்கே அதை தரம்பிரித்து கழிவுநீக்கி மிச்சமுள்ள தக்காளிக்கு மட்டுமே பணம் கொடுப்பார்கள். இதை கணக்கிட்டுபார்த்தால், மொத்த சரக்கில் 20% கழிக்கப்பட்டு மிச்சமுள்ள சரக்கில் தரக்கலவையின் அடிப்படையில் ஒரு விலை நிர்ணயித்து அதை கொடுத்தனுப்புவார்கள். இதில் கூட்டி கழித்து பார்த்தால் விவசாயிக்கு நட்டமே! இதனால் தான் ஆயிரக்கணக்கில் தொடங்கப்பட்ட ரிலையன்ஸ் ஸ்டோர்கள் மூடப்பட்டன. மற்ற நிருவனங்களும் பின்வாங்கிவிட்டன.

மற்ற பொருட்களென்றால், நாம் பார்த்துகொண்டிருக்கும் பிக்பஜார் போன்ற கடைகளில் உள்ளதுபோல் அவர்களுக்கென்று ஒரு பிராண்ட் வைத்துக்கொண்டு அதில் சட்டை பேண்ட்களை விற்பதுவே வழக்கம். இதற்கான கொள்முதல் எங்கு எப்படி நடைபெறும் என்பதற்கும் மேற்சொன்ன உதாரணமே!

இது ஆலிகோபோலி (Oligopoly) என்ற ஒரு வர்த்தக நிலைமையை உருவாக்கும். ஆலிகோபோலிக்கும், மோனோபோலிக்கும்(monopoly) இடைபட்ட தூரம் அதிகமில்லை. பெரிய கார்பரேட் வழிநடத்திச்செல்லும்.

இது மறுபடியும், அந்நியர்கள் நம்மை சுரண்ட நாமே போட்டுக்கொடுக்கும் எட்டப்ப திட்டம்தான். சிறு, குறு தொழில்முனைவோரும் அதை வாடிக்கையாளர் கைகளில் சேர்க்கும் வரை உள்ள சங்கிலியின் கண்ணிகளை உடைத்துவிட்டு நீண்ட கயிறாக கட்டிவிடுவதற்க்குச் சமம்தான்.

இதற்கு மேல் நீட்டிமுழக்கி எழுதவிரும்பவில்லை. கமெண்டினால், ரிப்ளையில் மற்ற விவரங்கள்!

இதனால் எந்த நன்மையும் இல்லை! எந்த என்றால் எல்லாமும்.
சிறுபுழுவிற்கு ஆசைப்படும் மீன்களே! சிந்திக்கவும்.

Friday 25 November 2011

அந்நிய நேரடி முதலீடு! - அரசின் விளக்கம்!

என்னாயா நல்லாருக்கீங்ளா! பாத்து ரொம்ப நாளச்சு! நம்மூருக்குள்ள வெள்ளக்காரய்ங்க வந்து பொட்டிகடை  வைக்க போறாய்ங்களாம்ல!? அத என்னன்னு வெவரமா கேட்டுபாப்பமா!?


அந்நிய நேரடி முதலீடுன்றது வெளிநாட்டுகாரய்ங்க நம்மூருக்குள்ள பணத்த போட்டு தொழில் வச்சு வுடுறது. அதுல 20%, 50% அப்டீ இப்டீன்றாய்ங்கள்ள, அப்டீன்னா, இங்க நடக்குற கடையில அவன் பங்கு அம்புட்டு, அதத்தேன் அப்புடி சொல்றாய்ங்க!

இப்ப கோதாவுல குதிச்சுருவோம்!
அந்நிய நேரடி முதலீடுன்னா என்னன்னு தெரியனும்னா, இத படிங்க  http://en.wikipedia.org/wiki/Foreign_direct_investment 

சில்லறை வியாபாரத்துல, அதாவது நம்மூரு பொட்டிகடையில அவய்ங்க கைய வைக்கிறத பத்தி இப்ப பேச வேண்டிய அவசியத்த தெரிஞ்சுக்க... http://www.firstpost.com/business/fdi-fineprint-easing-fdi-doesnt-ease-problems-plaguing-retail-140131.html

இப்ப நம்ம சச்சரவுக்கு வருவோம்!
இவய்ங்க காச கொண்டுக்கு வந்து கொட்டுனா நல்லதுதானேன்னு கேக்கலாம். ஆனா! அதுல ஒரு சிக்கல் இருக்கு! இன்னிக்கி என்னன்னா, ஒருசிலர பாதி பங்கு பார்ட்னராவும் மற்ற சிலவற்றை முழுசா ஓனராவும் இருந்துகிடுறதுக்கு நம்ம கவர்மெண்டு சரிக்குடுத்திருச்சு. இதுல தான் பிரச்சினையே! அவன் இங்க வந்துட்டா, நம்மூரு செட்டியாரு கடைல விக்கிறதவிட வெல கொறச்சு விப்பாய்ங்கன்னு கவர்மெண்டுக்கு எந்த களவானிப்பெய சொன்னானோ தெரியல! ஆனா! இவன் வந்துட்டா என்னென்ன நடக்கும்னு ஒரு சின்ன டிரெய்லர் ஓட்டி காமிக்கிறேன்!

1) பெட்டிகடையவிட சீப்பா, ஸ்டோரு கடைவச்சு விப்பாய்ங்க! பாக்க நல்லாவும் இருக்கும்!
2)நம்மூருக்கு பருத்தி வாங்க வார நாடாரு ஊருப்பக்கம் போயி ஏதாவது வேலைய பாக்கவேண்டியதுதேன். ஏன்டா, அவன் விக்கிற சட்டை விலைக்கும் நம்மூரு பருத்தி விலைக்கும் சம்பந்தமே இருக்காது!
3)தக்காளியோ, கத்திரிக்காயோ, வெண்டிக்காயோ புடுங்கிகிட்டு போயி கமிசன்கடையில ஒக்காந்துருக்க தேவையில்ல. நம்ம தோட்டத்திலயே வந்து வாங்கிகிருவாய்ங்க!(ஐ! ஜாலி!)
4)கலர்கலரா சோப்பு சீப்பு கண்ணாடிலாம் வெள்ளக்காரய்ங்க போடுறமாதிரி ஐட்டமெல்லாம் நம்மூர்லயே கெடைக்கும்.(நம்மளும் ரஜினிதேன்!)
5)துபாய்க்கு போனவய்ங்க வாங்கிவராத செண்டெல்லாம் நம்மளே இங்க வாங்கிகிரலாம்!(பட்டிக்காட்டான்னு எவனும் சொல்லிறமுடியாது!)
6)இன்னிக்கி நம்ம விக்கிர வெலயவிட அவன் ஒருரூவாயாச்சும் சேத்துதேன் தந்து வாங்கிகிட்டுபோவான்! (ஒரே பாட்டுல பணக்காரனாகிரலாம்!)
7)மருந்தடிக்க காசுகுடுத்துட்டு தக்காளி கூடைய தூக்கிகிட்டுபோனதும் காச கழிச்சுகிற ஏவாரிலாம் செத்தாய்ங்க!
................
இப்படி இன்னும் நிறைய இருக்கு. ஆனா இது எல்லாம் கவருமெண்டு நம்மகிட்ட சொல்லி புரியவைக்க நினைக்கிறதத்தேன் இங்க சொல்லிருக்கேன்!

உள்குத்த அடுத்த ப்ளாக்ல எழுதுறேன்! அதுக்குள்ள எல்லாரும் கத்திய தீட்டிக்குங்க!

Thursday 24 November 2011

ஒரு பொண் மாலைப் பொழுது!

ஹிஹிஹி! ஆமா, அது ஒரு பொண்ணு பார்க்கப்போன மாலைப் பொழுது!

ரொம்ப நல்ல குடும்பத்து பெண் என்று தரகர் சொன்னப்பவே மிடறு விழுங்கி அமர்ந்தேன். அரைமணி நேரம் எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. எல்லாமே என்றால் எல்லாமே அல்ல, அந்த மைசூர்பாகை மட்டும் கடிக்கமுடியவில்லை, அதனால் அச்சுவெள்ளத்தை நக்குவதுபோலவே நக்கிக்கரைத்துவிட முயன்றுகொண்டிருந்ததில் உலக இம்சைகளிலிருந்து விலகி அரைமணி நேரம் ஓடிவிட்டது.

திடீரென்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தப்பன் முதுகில் தட்டி இயல்புக்குள் இறக்கிவிட்டுவிட்டார். நிதானித்துக்கொண்டு என்ன, என்னவென்று கேட்டதில், பொண்ணப்பெத்த புண்ணியவான் ஏதோ கேக்குறாரு பதில் சொல்லென்று, இதுவரை எந்த இன்டர்வியூவிலும் பதில் சொல்லாத என்னை முதன் முறையாக விரதம் கலைக்க வைத்தார்கள்.

முதல் கேள்வியே கவுண்டமணியை பார்த்து செந்தில் கேட்டது மாதிரியான ஒன்று. துக்கம் தொண்டையை அடைக்க உடனே ஒரு பதில் சொல்லிவிட்டேன். பயப்படவேண்டும், பதிலுக்கு ஒரு கேள்வியைக் கேட்டேன் என்பதைதான் அவ்வாறு சொன்னேன்.

கேள்வி இதுதான்! தம்பி, உங்கள எல்லாருக்கும் புடிச்சிருக்கு, ஆனா, அதுக்கு முன்னாடி ஒரு சின்ன விஷயம், இந்த HIV டெஸ்ட் மட்டும் எடுத்துகிட்டு ரிசல்ட்ட கொண்டுவந்தீங்கன்னா மற்ற விசயத்த பேசிக்கலாம்?

நான்: சரிங்க மாமா சார், அதே போல ஒங்க வீட்லயும் பொண்ணோட அப்பா அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கான்னு ஒரு டெஸ்ட் எடுத்து குடுத்திட்டீங்கன்னா, தகுந்தமாதிரி செலவுக்கு வாங்கிகலாம்னு.... (பெற்றோருக்கு இருந்தா பெண்ணுக்கு வருமாம்ல) மத்தபடி இத வரதட்சணை கீழ வராதுன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.

எப்படியும் இந்த பொண்ணு அமைஞ்சிரனும்னு வர்றவழியில ஏசு சாமிலேருந்து எல்லா சாமிக்கும் மாலை போடுறதா வேண்டிகிட்டே வந்தேன். என்னங்க.... எல்லாம் நல்லபடியா முடிஞ்சிரும்ல!

பின்குறிப்பு: இது என் சொந்தகதை என்ற பொய்யான வதந்தியை யாரும் நம்ப வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். அப்பாடா!

முல்லைப் பெரியாறு அணை விவாதிகளுக்கு!

என் இனிய தமிழ் ட்விட்டர்களே! உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவின் பக்கத்து வீட்டுக்காரன் பேசுகிறேன்!

முல்லைப்பெரியாறு பற்றி அக்கரையாக ட்விட்டரை செதுக்கி கொண்டிருக்கும் ஆதரவு எதிர்ப்பு இயக்கத்தினரே! உங்கள் குடும்பங்களின் நலன் கருதி(இந்த கடுப்புல பொண்டாட்டிய அடிச்சு வெரட்டிருவாய்ங்க போல, அதான்!) உங்களுக்காக நான் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறேன்.

அந்த அணை எங்கள் ஊரில்தான் உள்ளது. அந்த அணை இடிந்தால் அழியப்போவது எங்கள் மாமன் மச்சான் மட்டுமே! அப்படி இருக்கையில் நீங்கள் காட்டும் உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்புகள் என் நெஞ்சை பிழிகிறது.
அதனால், அணை இடியுமென வாதிடுவோறும், இடியாதென வாதிடுவோறும் தேனிக்கு வந்து விடவும். உங்கள் அனைவருக்கும் நான் இருக்க இடம் உண்ண உணவு மற்றும் கிழியும் சட்டைகளுக்கு மாற்றுச்சட்டைகளையும் தருகிறேன்.

முதலில், வருசநாட்டுப்பக்கம் போயி, இந்த இரண்டு குரூப்க்குள் உள்ள சண்டையை தீர்த்துக்கொள்வோம்! ஆயுதங்கள் எல்லாம் இங்கு இலவசமாகவே தருவார்கள் எம்மக்கள்! சகல மரியாதையுடன் நல்லடக்கமும் செய்து வைப்பார்கள்.

எஞ்சி இருப்பவர்கள் அணைக்குச் சென்று ஆதரவோ எதிர்ப்போ தெரிவித்து போராட்டமோ, கரசேவையோ செய்து விட்டு வரலாம்.

அதைவிடுத்து, ஆயிரம் பேர்கூட கவனிக்காத ட்விட்டருக்கு உங்க சொற்பொழிவை ஆத்தவேண்டாம். ஆற்றினாலும் எவனும் இறங்கி வேலை செய்யப்போறதில்லை. இந்த தெளிவுடன், நான் மேலே சொன்ன செலவற்ற விருந்துக்கு வரவும்! அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

நன்றி

இவண்
ம.செந்தில்குமார்
தேனி

Monday 21 November 2011

நூறு சதவீதம் உண்மை!

நிஜமாத்தான்யா! அது ஒரு பொற்காலம்!

சாப விமோசனம்!

இந்தியாவ பத்தி யாராரோ கனவு காணும்போது இந்த மண்ணின் மைந்தன் நம்ம மாயாண்டி காண்பதில் எந்த தப்பும் இல்லைதானே. வருஷநாட்டுப்பக்கம் உள்காட்டு ஏரியாதான் அவன் உலகம். அப்பனும் ஆத்தாலும் செத்துப்போயி பலவருசமாச்சு. ஊருக்குள்ள என்பொண்ணக்கட்டிவைக்கிறேன்னு யாரு சொன்னாலும் சரி, அவங்கவீட்டுவேலையில இருந்து தோட்டவேலை வரைக்கும் எல்லாத்தையும் ஒத்தை ஆளா முடிச்சு குடுக்கிறதுதான் அவன் பொழப்பே!.

மாயாண்டிக்கு என்ன வயசாச்சுன்னு தெரியல. ஆனா மேலே சொன்னபடி இவன் கட்டாமல் விட்ட பெண்களெல்லாம் கல்யாணமாகி, அவர்களுக்கு இப்போது கல்யாண வயதில் பெண்ணே இருக்கிறார்கள். சரி சரி விடுங்க, இப்போ மேட்டருக்கு வருவோம்.

என்னதான் உலகமே இவனுக்கு உதவவில்லையென்றாலும் அவனுக்கு உலக அமைதியில் பெரும் பங்கு உள்ளது. அவன் ஓட்டுப்போட்ட கட்சிதான் இதுவரை ஆட்சிக்கு வந்து இந்தியாவைக் காப்பாற்றிக் கொண்டிருந்ததும் அதில் ஒரு காரணம்.

இன்று என்னமோ ரொம்பவே எரிச்சலாக வந்ததில், செட்டியார் தோப்பில் காலை நீட்டி படுத்துக்கொண்டான். உறக்கமும் நினைவுமான ஒரு மயக்கநிலையில் தான் காற்றில் தவழ்ந்து வந்தது அந்த ஞானோதயக் காற்று. இந்தியாவின் மக்கள்தொகை நூறுகோடிக்கு மேல் சென்றுவிட்டது என்றும் விலைவாசி எல்லாம் ஏறிவிட்டதென்றும் ரேடியோ பொட்டி சொல்லிக்கொண்டிருந்தது. தன்னால் என்னென்ன செய்யமுடியுமென யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். என்ன நடந்தாலும் சரி, கல்யாணம் மட்டும் பண்ணிக்கொள்வதில்லை என்று தீர்மானித்தான்.

கம்பீரமாக ஊருக்குள் நடந்து வந்தான். டேய்! மாப்பிள்ளை இந்த மாட்ட புடிச்சு கட்டிவச்சுட்டு போடான்னு கூப்பிட்டுக்கொண்டிருந்த ராமசாமி மாமாவின் குரல் காதில் விழாதது போல் நடந்துகொண்டே இருந்தான். பாவம் அன்று முதல் அவன் கஞ்சிக்கே கஷ்டப்பட்டானென்ற கதையை தொடர மனசு வரவில்லை. சரி விடுங்க, நமக்கெதுக்கு அது!

Sunday 20 November 2011

பெண்ணுரிமை போராட்டம் -1

ஐ.டி.சி.யில் இருந்தபோது கிடைத்த இன்சைடர் இன்பர்மேசன் படி பெண் சுமோக்கர்ஸ் வெறும் 7% தான் 2007ல். தற்போது அது ஒரு 15%ஐ தொட்டிருக்கலாம். ஆனால், இது பத்தாது, இன்னும் நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம். ம்ம்ம் இன்னும் போர்ஸா! இன்னும் இன்னும்.....

வாழ்க ஐடி கம்பெனிகள்! வளர்க பிக்காலி பிகர்கள்!

தமிழ் -1

பிரெஞ்சு நாட்டில் புகைவண்டிகளில் மிளிர்கிறது நம் திருக்குறள்! #அழகு!

ஆண்பாவம் - 3

ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடீ!

Friday 18 November 2011

காந்திமதி- உன்னைப் போல் ஒருத்தி!

நாம் பிறந்தவுடன் தாய் தந்தையர் அறிமுகப்படுத்துபவர்களை தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சின்னம்மா... என்றெல்லாம் நினைவில் இருத்தி, கடைசியில் ஓர் நாள் அவர்கள் இறந்ததற்காக ஒரு துளி கண்ணீரேனும் விடுகிறோம்.

அதே போல் சினிமா மூலம் அறிமுகமான ஆயிரக்கணக்கானோரில் ஒரு சிலரை மட்டும் நாம் நம் இதயத்திற்கு அருகில் வைத்துக்கொள்கிறோம்.

அப்படிப்பட்ட ஒரு நடிகை, எனக்கு பிடித்த ஒரு ஆள் இல்லை இல்லை என் உறவுக்காரி, அப்பத்தா, பாட்டி, அமத்தா இவற்றில் ஏதாவது ஒன்றாக நினைத்து எனது பிளாக்கில் ஒரு தனி போஸ்ட் போடவேண்டுமென்ற என் நெடுநாளைய கனவை இங்கே உங்கள் முன் பகிர்கிறேன்.

உண்மையான பாசத்துடன் என்றும் அழியா அவளின் நினைவை எனது பிளாக்கில் செதுக்கி வைக்கிறேன். கண்ணீர் அஞ்சலி!

சிவன் சொத்து குலநாசம்!

கடந்த கலைஞர் ஆட்சியில் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அரசின் வருவாயை சீர்படுத்தும் முறைகளை கையாளாமல் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டுமென்ற ஒரே நல்லெண்ணத்தில்(?) கஜானாவை காலி செய்துவிட்டு சென்று விட்டார்கள்.

திட்டங்கள் அறிவிக்கும் முன்பு அது நிதித்துறையின் ஒப்புதலுக்கு செல்வது உலக நடப்பு. அப்படியென்றால், இப்போது கணக்கில் காட்டப்படும் கடன்களை எல்லாம் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கத்தான் இத்தனை டிபார்ட்மெண்ட்கள், ஆபிசர்களா?

ஊழல் என்பது தனி ஒரு தலைவனோ, மனிதனோ இல்லை ஒரு இயக்கமோ, பொதுச்சொத்தை தின்பதுதான். சரி, அப்படி என்றால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பவர்களை என்னவென்பது???????

அசாருதீனும், மொத்தடீமும் கிரிக்கெட்டில் ஊழல் செய்ததென்றால், சச்சின் என்ன விரல் சூப்பிக்கொண்டிருந்தாரா? இல்லை, சச்சின் இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கி இருந்தாரா? இல்லை, சச்சினுக்கு தெரியாமல் எல்லாம் நடந்ததென்கின்றனரா? இதே நிலைப்பாடு தான் அரசு எந்திரத்திற்கும், ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிகளுக்கும் மற்றும் அனைத்து பொதுவாழ்க்கை பெருந்தலைகளுக்கும்!!!!! 


கடந்த அதிமுக ஆட்சியின் கடைசி ஓராண்டிலேயே இதுபோன்ற ”லூஸ்லவிடு” டைப் ஆட்டிட்யூடில் எதையுமே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு(ஓட்டு வாங்க) ஓடும்போது ஜெயலலிதாவிற்கு இந்த மக்கள் கண் தெரியவில்லையா?

கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்ததென்று, நடந்துகொண்டிருந்ததென்று, ஆட்சியை ஆண்டு பழகிய உங்களுக்கு தெரிந்திருக்கவில்லையா!

இன்று தான் தெரிந்ததோ உங்களுக்கு, கடந்த ஆட்சியில் கஜானா காலியாகிக் கொண்டிருந்ததென்று. தகவலறியும் உரிமைச்சட்டம் (RTI) என்று ஒன்று என்னா *****க்கு இருக்குன்னு தெரியல! எவனாவது டிராபிக் ராமசாமி மாதிரி கோமாளி போடுவார்களென்று நினைத்துக்கொண்டிருந்தார்களா?

இல்ல, ரெண்டுபேருக்கும் இடையில் ரகசிய உடன்படிக்கை இருக்கா? எந்தெந்த பிரச்சினைகளை மட்டும் தொடனும், போராட்டம் நடத்தனும், எவற்றில் கண்டுகொள்ளாமல் விட்டு விடவேண்டுமென்று!

இருக்கவனப்பூராம் லூசுப்பயகன்னு நினைச்சுகிட்டிருக்கீங்களா?  6-7 வருசமா கீழ விழுந்துகிட்ருந்த நிறுவனங்களை ஒரே நாளில் தூக்கி நட்டமா நிறுத்தி வைக்கிறத யாரு, முகமது பின் துக்ளக் சொல்லிக்குடுத்தாரா? பல வருசமா நிர்மாணிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்த டில்லியை விட்டு தலைநகரை ஒரே நாளில் மாற்ற நினைத்த அந்த புத்திசாலிக்கும், தங்களைப் போன்ற மாமேதைக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

வெட்டுபட்டமரம் வளரவேண்டுமென்றாலும், ஒவ்வொரு அடியாக, நாட்பட நாட்படத்தான் வளரும். ஒரேநாளில் பெரிய மரமாக வளர்க்க ஒன்று மந்திரவாதி வேண்டும், அதற்கு அடுத்தபடியாக துக்ளக்கின் வாரிசு நீங்கள் தான் வேண்டும்.

இந்த ஒரு சிறு மேனேஜ்மெண்ட் டெக்னிக்கை கூட சொல்லித்தற ஒரு ம.....ண்டியும் ஒங்க பக்கத்துல இல்லன்னா! அதுக்கு காரணம் யாரென்றும் உங்களுக்கு தெரியும்.

ஜெயலலிதா அம்மா! கலைஞர் அய்யா! மற்றும் வருங்கால முதலமைச்சர்களே! நீங்க ஓட்டிட்டு போறது சைக்கிள் இல்ல. மோதுனா நீங்க மட்டும் சாக, அது பஸ், உங்கள நம்பி ஏறிருக்கவய்ங்கள வீட்டுவரைக்கும் கொண்டுசேர்க்க முடியலைன்னா, பஸ்ஸ விட்டு பொடனியச்சேந்து அடிச்சு எறக்கி விட்ருங்க!

அகதியா அலையிறது தமிழனுக்கு ஒன்னும் புதுசில்ல!


பி.கு: ஊர்ச்சொத்தைத்தான் சிவன் சொத்து என சொல்வது வழக்கம்!(தலைப்பு விளக்கம்)

Monday 7 November 2011

நான் அறிந்த அப்துல்கலாம்!

அப்துல் கலாம் என்பவர் ஒரு ராக்கெட் விஞ்ஞானி. அவரால் இந்திய ராக்கெட் டெக்னாலஜி தன்னிறைவு பெற்றதுடன், உலகநாட்டு செயற்கைக்கோள்களையெல்லாம் இந்திய மண்ணிலிருந்து ஏவ வித்திட்டவர்.

கடலுக்கடியில் நடக்கும் காண்டினெண்டல் ஷிப்ட் முதல் கடாபி குளித்துக்கொண்டிருக்கும் சோப்புவரை உளவுபார்க்கும் அதிநவீன உளவுத்துறை சாதனங்களையும் நெட்வொர்க்கையும் கொண்ட அமெரிக்காகாரன் கண்ணுலயே மண்ணத்தூவிட்டு, “புத்தர் சிரித்தார்”னு கூலா சொன்ன ஒரு இந்தியன், தமிழன்.

இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த ஒரே சயின்டிபிக் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் IISC, Bangalore தான் என் சிற்றறிவிற்கு எட்டியவரை!(நான் அங்கே தங்கி அந்த லேப் பெசிலிட்டிகளை எல்லாம் பார்த்தவன் என்ற முறையில், என் நண்பன் அங்கே இண்டகரேட்டட் பி.எச்.டி. படித்தான், இருவரும் தினமும் சப்ஜெக்ட் சம்பந்தமாக பேசிக்கொண்டோம் என்ற முறையில். (சப்ஸ்டேண்சியேட்டிங் ஸ்டேட்மெண்ட்!)) அந்த இன்ஸ்டிட்யூட்டுக்கென்று சில விதிமுறைகள், அதிலொன்று டாக்டரேட்(Ph.D) பண்ணாத ஒருவர் புரொபசராக சேருவதற்கு தகுதியற்றவராகிறார். இதற்காகத்தான் ஐயா அப்துல் கலாமை அவர்கள் நிறாகரித்தனர். திறமை இல்லை என்றல்ல!


அதன்பிறகு அண்ணா யுனிவர்சிட்டியில் அவர் பேராசிரியரானது அனைவரும் அறிந்ததே!

அவர் பிரெசிடெண்டாக இருந்த போது(2004-05) அவரிடமிருந்து(அவரது அலுவலகத்திலிருந்து) ஒரு கடிதம் CRIDA(Central Research Institute for Dry Land Agriculture) ஹைதராபாத்திற்கு வந்தது. அதில் பயோப்யூயல் (Bio-Fuel) தயாரிக்க தேவையான Jatroba(ஜட்ரோபா-ஒரு வகை காட்டாமணக்கு) பற்றிய ரிசர்ச் பேப்பர்களை அனுப்பச் சொல்லி கேட்டிருந்தது. அதாவது இந்த தாவரத்தை வளர்க்கும் முறைகளை கேட்டிருந்தார்கள். அன்றைய கால கட்டத்தில் அந்த தாவரத்தை ஒரு காட்டுச்செடியாக மட்டுமே பதிவு செய்து வைத்திருந்தார்கள். அதன் பல்வேறு சிற்றினங்களை(species) பற்றிய ஒரு சிறுசெய்தி மட்டுமே இருந்தது, அதன் வகைகள்(Varieties) டெவலப் செய்யப்படவில்லை. அந்த பொறுப்பை என் நண்பன் ஒருவனின் தலையில் போட்டுவிட்டார் அதன் தலைவர். அப்போது அவனும் நானும் சேர்ந்துதான் அதற்கான மெட்டீரியலை தயாரித்து அனுப்பினோம். ஆனால் அடுத்த ஒரு மாதத்திலேயே ஹைதராபாத் வந்திருந்த கலாம் அவர்கள், ஆந்திர அரசின் முன்னோடி திட்டமான பயோ ப்யூயல் திட்டத்தையும் அதற்கான் ஒரு பேக்டரியையும் தொடங்கிவைத்தார்.

அது அனைத்து நாளிதழ்களிலும் ஆகா ஓகோவென புகழப்பட்டு அடுத்த சில நாட்களுக்கு இந்தியாவின் வருங்காலமே அதுதான் என கொண்டாடப்பட்டது. எனக்கும் என் நண்பனுக்கு மட்டும் எதுவும் விளங்கவில்லை!

2006-07ம் ஆண்டுகளில் ஆந்திரா முழுவதும் உள்ள கிராமங்களுக்கு நான் மற்றொரு காரியத்திற்காக சென்றபோது அங்கு நான் கண்டது ஜட்ரோபாவால் ஏமாற்றப்பட்ட அப்பாவி விவசாயிகளின் முகங்கள் தான். இன்று அந்த ஜட்ரோபா பெயரளவில் எக்சிஸ்டிங்.

அதன்பின், அதே போன்றதொரு ஸ்டடி ரிப்போர்ட் நான் சப்மிட் பண்ணியது “சோலார் பவர் - ஸ்கோப்ஸ்(Solar power - Scopes). அந்த நேரத்தில் காற்றாலைகளை ஒருசில இடங்களில் மட்டும் பைலட் முறையிலேயே நிறுவியிருந்தார்கள், இனிசியல் காஸ்ட் அதிகமென்பதால். ஆனால் இன்று அது நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது(அட்லீஸ்ட் எங்க டிஸ்ட்ரிக்ட்ல). ஆனால் இதற்கும் சோலார் பவர் போன்ற சீசனல் லிமிடேஸன்ஸ் உண்டு.

அணுசக்தி என்பது ஒரு பாராவில் சொல்லக்கூடிய செய்தி அல்ல. என் இரண்டு வருட ரிசர்ச்சை(அணுசக்தியின் விளைவு பற்றி) முடித்த பின்பு, ஒரு சயின்டிபிக் ரிசர்ச் போட எனக்கு இரண்டரை ஆண்டு காலம் பிடித்தது. எனவே இதை பற்றி தெரிந்துகொள்ள நிறைய படிக்கவேண்டும். யாரோ ஒரு புரொபசர் எழுதிய புக்கை மட்டும் படித்துவிட்டு எழுதக்கூடாது. ஏனென்றால், எனக்கு தேவையான ரிசல்ட் வேண்டுமென்றால் சிமிலர் ரிசல்ட் பேப்பர்களை மட்டுமே சேகரித்து ஒரு புக் போட்டு விட முடியும். எனவே இதை பற்றி நீங்களே படித்து புரிந்து கொள்ளுங்கள்.


இந்த ஆர்ட்டிகிலின் முக்கிய நோக்கம் அப்துல் கலாம் அவர்கள் எதற்காக கூடங்குளம் வந்தார் என்பது எனக்கு தெரியாது. அதே போல் அவருக்கு எந்த அளவுக்கு இதைப்பற்றி தெரியும்னு கேட்கப்படும் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. ஆனால் எனக்கு தெரிந்ததையும் நான் பார்த்த அப்துல் கலாம் அவர்களையும் உங்கள் முன் ஒழிவுமறைவின்றி சொல்லியிருக்கிறேன்.

மற்றபடி உங்கள் முடிவே இறுதியானது!

நன்றி!


அப்துல் கலாம், ஆற்றல் பிரச்சினை, அறியாதவைகள்!

கேக்கிறவன் கேனப்பெயன்டா..... என்ற கூற்றை நிரூபிக்க இன்றைய எடுத்துக்காட்டு நண்பர் ஒருவரின் ப்ளாக் தான். அதை உங்களுக்காக இங்கே லிங்குகிறேன். http://www.dianuke.org/abdul-kalam-article-eas-sharma/ 

இதை சர்மா என்பவர் எழுதி இருக்கிறார். அதில் அணுசக்தி பற்றி டாக்டர். அப்துல் கலாம் அவர்கள், ஒரு நாளேட்டிற்கு எழுதிய கட்டுரையின் விமர்ச்சனமாக அமைந்துள்ளது.

இதை படித்துக்கொண்டிருக்கும் போது, ஏதோ ஒரு பாமரன்(துறை அறிவற்ற) தன்னுடைய சந்தேகத்தை, மற்றவர்களுக்கும் தூண்டும்படியாக தத்ரூபமாக எழுதியிருக்கிறான் என நினைத்தேன். ஆனால் அதன் முடிவில், தன் பெயர் சர்மா என்றும், தன்னை Former Secretary (Power), GOI, Former Adviser (Energy), Planning Commission, Visakhapatnam என்றும் அவர் அறிமுகப்படுத்தியதைக்கண்டு அதிர்ந்து போனேன்.

இப்போது நேரடியாக விஷயத்திற்கு வருவோம். அவர், கலாம் அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்டுள்ளார். அவற்றில் அவர் முக்கியமாக சந்தேகிப்பது கலாம் அவர்களின் துறைசார்ந்த அறிவியல் அறிவையும் அதற்கான சைண்டிபிக் பேப்பர்ஸ் இருக்கிறதா என்பதையுமே!.

இதில் நான் தலையிட காரணம்: BARC- Mumbai உடன் எனக்கு இரண்டு ஆண்டுகள் Atomic Research சம்பந்தமான தொடர்பு இருந்தது தான். அந்த வகையில் அணுக்கதிர்வீச்சின் குணங்களையும் அவற்றுடன் வாழ்வதன் சாதக பாதங்களையும் “அனுபவித்து” அறிந்தவன் என்ற சிறிய ரோசம் தான்.

இவ்வகையில், சர்மா அவர்களின் கட்டுரை மிகவும் ”சூப்பர்பீசியல்” அறிவுடன் எழுதப்பட்டது என்பதை என்னால் உணர முடிந்தது.

அவரின் கேள்விகளுக்கு விளக்கம் தரவேண்டுமெனில் பல பக்கங்கள் தேவைப்படும். அவற்றை தேவைப்படும்போது தேவைப்படுவோருடன் மட்டும் பகிர்ந்துகொள்கிறேன். இப்போதைக்கு, அவரின் ஆர்ட்டிகிளிலிருந்து ஒரு சிறு பகுதியின் அறியாத்தனத்தை உங்களுக்கு விளக்குகிறேன்
You have talked about the links between energy and economy. I hesitate to question your wisdom on this. However, I am not sure whether you are aware of the impact of efficiency improvements, demand management and other measures on the link between energy and economic development.”

இது என்னமோ ”உணவிற்கும், உடல்பலத்திற்கும் இடையே: மனநிலை பேதலிக்காமலிருப்பதும், கையும் வாயும் ஒத்துழைப்பதும் முக்கிய பங்கு வகிக்கின்றன்றன. அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்பதுபோல் அல்லவா?. இதை அரைகுறை அறிவுள்ள எந்த மனிதனும், “ஆமாம், சரிதானே! அவர்கேட்பதில் என்ன தவறு” என்று கேட்கவைக்கும். இது தெளிவுபடுத்துவதல்ல. குழப்புவது.

இவ்வாறு திசை திருப்பும், மக்களைக் குழப்பும் இதுபோன்ற ஆர்ட்டிகிள்கள், இதை எதிர்க்கவேண்டுமென்று முடிவுசெய்தவர்களுக்கு ஒரு நொண்டிக்குதிரையாக கைகொடுக்கிறது.

அதேபோல் அவர் கேட்கும் ஒரு முக்கியமான கேள்வி, அணுசக்தி உலையின் தீமைகள்? கண்டிப்பாக தீமைகள் உண்டு. இதை விளக்க, எனக்குத் தெரிந்த வழி, என் தாத்தா எனக்கு போன் பண்ணி, ”ஏன்டா! ஏரோபிளேன்ல போறதே ஆபத்தாம்லடா! நிதமும் ஒரு ஏரோபிளேன் விழுந்துருச்சு, நெறையபேரு செத்துபோய்ட்டாய்ங்கன்னு செய்தில காட்ராய்ங்கடா. வேணாஞ்சாமி! நீ இங்கயே வந்துடு, வெளிநாட்டுக்கெல்லாம் போகவேணாம்”னு சொல்லும்போது, அதை பொய் என்று மறுத்துவிடமுடியுமா? இல்லை நான் போகிற ஏரோபிளேன் விழுகாதுன்னு உறுதிகொடுக்க முடியுமா?


இன்னும் விளக்கிக்கொண்டே போகலாம். ஆனால் என்மனஓட்டம் இப்போது என்ன சொல்கிறதென்றால், “அரைமணி நேரத்துக்கு மேல லெக்சர் எடுத்த வாத்திய நீ என்னா மானக்கேடா திட்ன, இப்ப நீயே????”. ஆகையால் இப்போதைக்கு இவ்வளவு தான்! விரும்பிக்கேட்டால் இன்னும் விரியும்.



டயம் கிடைத்தால் இதையும் படிக்கவும். அந்த பிரச்சினையை பற்றி புரிந்துகொள்ளாமல், அதைப்பற்றிய டெக்னிகல் நாலேட்சும் இல்லாமலே எப்படி வாதாடலாம் என பின்னூட்டத்தில் இருந்து இரு அண்ணன்மார்களின் குறிப்புகள் இங்கே!

ஆர்ட்டிகிளுக்கு/ஆதருக்கு எதிர்ப்பு பின்னூட்டம்:

Rcomp says:
Respected Sir,
You worked as a Advisor (Energy). I request to provide following information to the public
1) What should be the energy policy to India should adopt. Please tell us how to meet the demand and supply balance.
2)If a country to become energy independent developed nation, What are revolutions required in the energy sector in Indian context?
3) Compare solar, wind and nuclear in the following conditions.
a) per MW rate b) land requirement c) Availability in a year
4) People talks about non renewable in the past 30 years. I am from nagercoil, nearest town of Kudankulam. In 1988 when the same agitation was there, people talked about solar , wind etc. But last 25 years I didn’t find them in the competitive market. The same statement people are repeating now.
5) Can you make a model village/town which runs only with Non-renewable energy. Take the industry town in tamil nadu, Sivakasi and try to implement it as an example .
6)Try to make the village, where agitation is going on (Idithakarai), as solar powered village and then write about that.
6)Nearby Bangladesh last week sighed agreement with Russia for the construction of 2 ,1000 MW Reactors, Why?
7) UAE signed agreement with Korea for building nuclear reactors, (after a week of Fukushima accidnet) , why?
8) Please explain how many Nuclear reactors are under construction now in china?
9) If you feel that our energy policy is bad, why didn’t advice the Govt to change it when you were the Energy (Advisor)?
10) In your house you may having generator etc… Day to day we are suffering 6-8 hours power cut, In tamilnadu we don’t have sufficient water for agriculture and drinking. How can we get Hydro power?
Every day there are fights for water with neighboring states, Kerala(mullaiperiyar dam issue), Karnataka (Cauvery river issue), Andhra(Krishna river). What is alternate for our state.
11)Last one month see the condition in tamil nadu, there is shortage of coal, because of that thermal power production reduced. how to over come that?
12) Green peace people are warning us about Global warming, reduction in co2 emission is reqd etc, If the condition applies, How thermal power will go ahead?
13) petrol prices soaring up and oil companies always telling they are in loss.
Please spend some valuable time and clear my doubts


எதிர்கேள்விகேக்கிற வக்கீல்சார் இவரு:
Ramu says:
Dear rcmp,
I am about 15 kms from koodankulam.
Do u have any answer for the questions?
1. Nuclear plant will run for 30 years after that what will be you do for power?
2.How nuclear radioactive wastes is going to be managed?
3.Why there is no Environment Impact Assessment(EIA) for the reactors?
4.Why Germany, Italy, switerzland are shutting down their nuclear reactors?
5.Why there is no independent body to monitor nuclear plants?
6.R u ready to relocate to idinthakarai? Give your home to people from the that area for 5 -6 years till the people feel there is no danger?
7.What is the contingeny plan for the plant?
8.How to decommission the plant after 30 years?
9.Fish export to the amount of 2000 crores/yearly will be stopped and affects country’s GDP?
10.As happened in france,nuclear power waste can get into the our drinking water that can kill us or make us very sick plus a lot of people can die from the nuclear reaction. how can you deny them?
11.Several epidemiological studies claim increased risk of various diseases, especially cancers, among people who live near nuclear facilities. what is your answer to this?
12.Most commercial nuclear power plants release gaseous and liquid radiological effluents into the environment as a byproduct of the Chemical Volume Control System which affects sea aquatic system. The livelihood of people is also affected. what can be done to overcome this?
13.Spending too much money in nuclear plants for generating fewer amount of power. if the government spends renewable power more power could be generated. why government is only jumping on nuclear power?
14.The nuclear liability bill is passed by govt to protect nuclear companies to provide them immunity. if its too safe why the company is not accepting liability?
15.bhopal disaster victims are not even provided good medical facilities, compensation and livelihood.we are in a country were safety is not a issue in most cases. how can you trust the govt on safety matters?

இந்தமாதிரி இன்னும் நெறையபேரு திரியிறாய்ங்க! அந்தாளு கொளுத்திப்போட்டுட்டு ஒக்காந்து குளிர்காயிறாப்ல!

Sunday 6 November 2011

போடா வெண்ணை! - விளக்கவுரை

என் இ.வா. டமில் மாக்களே!

ஆனா ஊனா, போடா வெண்ணைன்னு திட்டுவாய்ங்க நம்மூர் அண்ணன்மார்கள். அதற்கு இரண்டு காரணம்,

1) Eco -Friendly யாக சைவ முறையில் (டூத் பேஸ்ட்ல பச்சை வட்டம் போட்ருப்பாய்ங்களே) திட்டி தன் எதிர்ப்பை தெரிவிக்க

2) தான் திட்டினதுக்கு என்ன அர்த்தம்னு எவனுக்குமே(அவனுக்கும்) தெரியக்கூடாதுங்கிற நல்லெண்ணதிலயும்

இப்படி, திட்டுபவருக்கும் திட்டுவாங்குபவருக்கும் பிரியாத வார்த்தை தான் வெண்ணை. ஆனால் முருகன் எனக்கு இன்னிக்கு மத்தியானம் கனவுல வந்து இந்த மூடநம்பிக்கையா உலகத்தை விட்டு விரட்டும்படி பணித்திருக்கிறான்.

எனவே, விஷயத்துக்கு வருவோம்.

திருவள்ளுவர் தன்னோட ஒரு குறல்ல இதப்பத்தி வெளாவரியா வெளக்கிருக்காரு. அந்த குறலு...

”வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு”

இதுக்கு இன்னா அர்த்தம்னா, அறிவுகெட்டவன் யாருன்னா, எவனெவனெல்லாம் தன்னைத்தானே அறிவாளின்னு சொல்லிகிட்டு திரியிறானோ அவனே தான்!

மேட்டர் என்னானா, வெண்மை =அறிவுகெட்ட

இதுலேருந்து இன்னா பிரியிதுன்னா, இந்த திட்றவார்த்தைய ஆரம்பிச்சு வச்சது நம்மாளுதேன். அதுகாலப்போக்குல போடா வெண்மை!... வெண்ணை’ன்னு மருவிடுச்சு.

ரொம்ப நீட்ட விரும்பல..... ஏன்னா நம்மாளுதான் நீட்டலும் மலித்தலும்....னு...

சரி சரி! பிரியிது.

பி.கு. இதுதான்யா எழுத்தாளனா நான் எழுதுன முதல் காவியம்!

Saturday 5 November 2011

உண்மை சுடும்! சுட்டுட்டுபோகுது...


திராவிடம் - தெரிந்துகொள்வோம்



Dravidians The natives of India

The Dravidians are a people, most living in sou...thern India and Sri Lanka. The sub-groups are South-Dravidians, Central-Dravidians and North-Dravidians.
The word "Dravidians" also means "Tamilic peoples" in Sanskrit.
The Dravidians speak a rich and very old language. There are 27 different Dravidian languages. The four major Dravidian languages are Tamil, Telugu, Kannada and Malayalam. The Dravidian culture was very developed. The color of the Dravidian nation is black and red. The most important animal in Dravidian culture is the bull. Bull embodied masculinity and strength. Bull is also the mount of Lord Shiva. The Dravidians are very religious and built great temples. Most of the Dravidian Hindus are followers of Shaivam. The warrior culture was an important part of the Dravidian culture. The Dravidian martial arts are one of the oldest in the world and foundations for some Asian martial arts. The Dravidian warriors were described as fierce and brave in the history.

The Dravidians are the natives of the Indian continent. There were Dravidian tribes in northern and central India, and great kingdoms in the south. The Dravidians and Vedic Civilization of Indus Valley shared their knowledge with each other. The Vedic gods and Dravidian gods were by both accepted and that was the beginning of the common religion Hinduism. But there are also things or gods that only exist in Vedic or Dravidian culture. Tamil and Sanskrit are the religious language of Hinduism. The researchers believed that Tamil is the oldest Dravidian language and mother of all Dravidian languages. Through the mix of Tamil and Sanskrit have a lot of new languages emerged. Tamil has survived and Sanskrit is extinct. Because of the new languages, have new dynasties and nations formed.

Origin of the Dravidians and the Kumari Kandam Legend

Ancient Tamil scriptures tell of a continent names Kumari Kandam. In this continent should Dravidians and other peoples like the Nagas and the ancestors of people the eastern India, Sri Lanka, Indochina or Indonesia have lived. In the middle of the land was a mighty Dravidian kingdom. The emblem of this kingdom was bull. The Dravidians led successful campaigns against the Nagas and other peoples and had the predominance in Kumari Kandam. The Dravidian population was developed differently. There were highly cultured Dravidian kingdoms or cities and aboriginal tribes. Here in Kumari Kandam should worship the Lord Shiva originated. Kumari Kandam was very wooded and Lord Shiva would have meditated in the sacred forests. Later was this continent submerged. It was mentioned that the land go down, because a fateful tidal wave. The Dravidians and other peoples fled to India and other countries. After the fall of the Kumari Kandam, began a new era for the Dravidians.

Origin of Dravidia (South India)

South India became the new national focus of Dravidians. South India is also called Dravidia, home of the Dravidians. Over the years, have the Dravidians built in South India a mighty empire. They expanded their empire to Central India and settled there. The place in southern tip of India is called Kanyakumari. This place will remind the Dravidians of the lost homeland Kumari Kandam. A goddess of this region has the same name. The first Dravidian kingdom in southern India was the Pandya kingdom. The Pandya dynasty could be the descendants of the royal family of Kumari Kandam. "Pandi" was an ancient Tamil word for bull. The holy bull of Shiva is called Nandi. (N) andi = (P)andi. The emblem of the early Pandya was probably bull. Existence of a continent in the Indian Ocean has been confirmed by scientists. They also found objects under water. But there are still a lot to research in ancient history and Kumari Kandam.

Kumari Kandam image:
http://www.facebook.com/photo.php?fbid=132517446769542&set=a.129595247061762.15527.128797930474827&type=1&theater

More about Dravidianhttp://www.facebook.com/photo.php?fbid=178013758886577&set=a.129595247061762.15527.128797930474827&type=1&theater
See More
Hindu history

என்னோட டீம்!

நினைவோ ஒரு பறவை.....

Friday 4 November 2011

Madurai Meenakshi Temple


OUR MADURAI MEENAKSHI AMMAN TEMPLE ~ SOME FACTS


*According to legend, the sacred Suyambulingam discovered by the king of Gods Indira at Kadambavanam, was later enshrined by him in Madurai. The fact that the Lord is seen on the vehicle of Indira in this temple is said to be proof for this.

... *Many historical evidences of the temple have been found dating back from early A.D.

*The temple was almost completely destroyed in the year 1310 following the invasion of the Islamic conqueror Malikkapur. As kings who were followers of Islam were noted for their intolerance towards other religions, the invaders destroyed most of the ancient sculptures of the temple.

*Thirugnanasambandar the Hindu Saint has mentioned the temple in his songs which go back to early 7th century. The Lord has been described as Alavai Iraivan in his songs.

*The temple was restored to its pristine glory in the late 14th century when the Hindu Kings came back to power in Madurai. This can also be termed as a new beginning of a new era in the history of the temple, when it was almost rebuilt.

*The King Thirumalai Naicker played an important role in the construction of the new form of the temple according to records.

*The Madurai Meenakshi Amman Temple is now under the administration of the HR and CE department of Tamil Nadu.

Thursday 3 November 2011

அப்பாடக்கர் - விளக்கவுரை!

Appatakkar ku meaning :P
எவ்வளோ அப்பாடக்கர்ஸ் இருந்தாலும் யாருக்கும் சரியான அர்த்தம் தெரியாது !

கவலைய வி...டுங்க.....

கண்ணீர துடைங்க ....

i will explain...


' அப்பாடக்கர் ' என்றால் என்ன?


இது சென்னையைச் சேர்ந்த செந்தமிழ்.
மகான் தக்கர் பாபா சென்னையில் சிலகாலம் இருந்தபோது சென்னைவாழ் மக்கள் அவரை அன்புடன் அப்பா தக்கர் பாபா என்று அன்போடு அழைத்து இருக்கின்றனர்.
வேதங்களிலும்,ஞானங்களிலும் கரைகண்ட அவரிடம் ஆன்மீகம் தொடர்பாக எந்தக் கேள்வி கேட்டாலும் தெளிவான பதில் கிடைக்கும். அதேபோல ஒருவன் அவன் துறையில் தெளிவாக அனைத்தையும் தெரிந்தவனாக இருந்தால் அவன் பெரிய அப்பாதக்கர் என்று சொல்லப்பட்டு பின்னர் சென்னை உச்சரிப்பில் அப்பாடக்கர் ஆகிவிட்டது.
அப்பா தக்கர் பாபா வித்யாலயான்னு டிநகர்ல ஒரு ஸ்கூல் இருக்கு. இப்படி சொல்லிக் கேட்டீங்கன்னா அங்க ஒரு பயலுக்கும் தெரியாது.
அப்பாடக்கர் ஸ்கூலு எங்கருக்குன்னு கேளுங்க, டக்குனு காட்டுவானுங்க :)


( நன்றி : தோழர்.ரோஜாராமன் ! )

கட்டிங்,ஒட்டிங்அன்ட் எடிட்டிங் : உங்கள் ' மனோசெந்தில் ' .
[ யாருப்பா அது விசிலடிக்கிறது.... எனக்கு விசிலடிச்சா பிடிக்காதுன்னு தெரியும்ல ! ]

தமிழ்க்குடிமகன்களுக்கு மட்டும்!

Wednesday 2 November 2011

சாதிகள் இல்லையடி பாப்பா!

எனக்கென்னமோ இந்த மேட்டர இங்க இருந்துதான் ஆரம்பிக்கனும்னு நினைக்கிறேன்.


நம்மில் பல பேருக்கு ஜாதியை பற்றி விவாதிக்கும் மக்களை ஏன் பள்ளிகூடங்களில் இன்ன ஜாதி என ஃபில் செய்யும்படி வற்புறுத்துவது வேதனை.2000 ஆம் ஆன்டு வெளியான கட்டாய ஜாதி குறிப்பீடு தடை சான்றிதலை இனைத்துள்ளேன். இதன் சாராம்சம் இனிமேல் ஜாதியை குறிப்பிட தேவையில்லை. இதற்க்கு மேலும் அந்த பள்ளி ஜாதியை பற்றி குறிப்பிட சொன்னால் அருகில் உள்ள கலக்டர் அலுவுலகம் அல்லது காவல் நிலையத்தில் புகார் செய்தால் கிரிமினல் வழக்கு பாயும்.

தயவு செய்து லைக் மற்றும் கமென்ட் போடாமல் "ஷேர்" பன்னவும். ஜாதி ஒழிப்பை விரும்புவர் ஷேர் பன்னவும், மற்றவ்ர்கள் வழக்கம் போல்....