Saturday 6 October 2012

Artificial rice to reach market


Theresa Sufa, The Jakarta Post, Bogor | Jakarta | Mon, September 03 2012, 5:35 AM

Agriculture Minister Suswono has launched food products made from local plants that have been developed by the Bogor Agricultural Institute (IPB) to support food diversification.

“We don’t need to worry about food scarcity because we have an abundance of natural and human
resources. What we need now is more innovation as the number of fields for agriculture is limited,” he said during the launch at the campus on Saturday.

Researchers at the IPB have produced food products that have been processed to have similar characteristics to food made from rice.

By adding fiber, antioxidant substances or other ingredients, the artificial rice that can be made from corn, sorghum, sago and tubers is ideal for a customized diet.

The researchers describe the products as “analog rice” because they have analogous characteristics to conventional rice.

Suswono said that with such innovations, the archipelago had no reason to worry about food shortages, especially when extreme weather occurred.

Slamet Budijanto, the IPB’s director of agriculture technology and one of the product researchers, said that analog rice had made it to the 2011 list of 103 innovations in the country and had also received an award from the West Java administration.

“We hope in the future for private-sector involvement in the production of analog rice to support national food sustainability,” he said.

Slamet said that two months ago, Depok administration had ordered 250 kilograms of the artificial rice, adding that soon the West Java administration would also order it.

The advantages of artificial rice are that it can be cooked through both conventional and modern means, and people do not need to wash it before use.

But the price is still expensive, ranging from Rp 9,000 (99 US cents) to Rp 14,000 per liter, depending on the ingredients used to make the rice. Due to its cost, the product is aimed at middle-to-upper class consumers.

Such a product had previously been studied by several other universities and research centers in China and the Philippines.

Indonesia, the world’s third-largest rice producer after China and India, with a population of 240 million, annually consumes 139 kilograms per capita. But it has been unable to maintain self-sufficiency and relies a lot on imports of the staple food as stockpiles have fallen and harvests failed to meet targets.

The government has set a target of a surplus of 10 million tons of rice in 2014 as part of the rice-self sufficiency program it launched several years ago.

தங்கத் தமிழ் நாட்டினிலே....



"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"


இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்திபடித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல
் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.
கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்களூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

Source: I love Tamilnadu 


தினமலர், மார்ச் 25, 2013


சென்னை: ""கெயில் நிறுவனம், விளைநிலங்கள் வழியாக, எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும். வேளாண் நிலங்களில் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரம், எரிவாயு குழாய்களை பதிக்க, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம், நேற்று துவங்கியது. கேள்வி நேரத்திற்குப் பின், தி.மு.க., உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., டில்லிபாபு, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர், கெயில் விவகாரம் தொடர்பாக, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஏழு மாவட்டங்கள் பாதிப்பு: இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில் உரை: தமிழக அரசு, மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறது. கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து, பெங்களூரு வரை, தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய, ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் கீழே, 310 கி.மீ., தூரத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, கெயில் நிறுவனம் திட்டமிட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு: இருபது மீட்டர் அகலத்தில், குழாயை பதிக்க, 5,842 பட்டாதாரர்களுக்கு சொந்தமான, 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெற, கெயில் நிறுவனம், நடவடிக்கை எடுத்தது. இதற்கான இழப்பீட்டுத் தொகை, நிலத்தின் சந்தை மதிப்பில், 10 சதவீதம் ஆகும். இத்திட்டம், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதனால், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்றும், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம், 28ம் தேதி, அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும், நான் ஆலோசனை நடத்தினேன். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, விவசாயிகளிடம், கருத்துகள் கேட்கப்பட்டன. தலைமைச் செயலர் நடத்திய இந்த கூட்டங்களில், 134 கிராமங் களில் இருந்து, 2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். "எரிவாயு குழாய் அமைப்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம், மிகக் கடுமையாக பாதிக்கப்படும். விவசாய நிலத்தின் பெரும்பகுதி பயன்பாட்டு உரிமையை, கெயில் பெறுவதால், எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய இயலாமல், நிலத்தின் பெரும் பகுதியை இழக்க நேரிடும்' என்பது உள்ளிட்ட, 10 கருத்துகளை வலியுறுத்தி உள்ளனர்.
கெயிலுக்கு என்ன பிரச்னை...: கடந்த 8ம் தேதி, கெயில் நிறுவனம், தமிழக அரசு தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலைவழியாக, குழாய் பதிக்கும் திட்டத்தை மேற்கொண்டால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை, விளக்கமாக கூறி உள்ளது. நிறுவனத்தின் கருத்துகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சேபனைகள் ஆகியவற்றை, தமிழக அரசு, கவனமாக பரிசீலித்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாததற்கு, வலுவான தொழில்நுட்ப காரணங்கள் எதையும், கெயில் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மாறாக, விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம், எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை, தெள்ளத் தெளிவாக கூறி உள்ளனர். விவசாயிகளின் வீழ்ச்சியில், தொழில் வளர்ச்சி ஏற்படுவதை, நியாய உணர்வு கொண்ட யாரும், ஏற்க மாட்டார்கள். ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் எனில், அதனால், யாருக்கு, எவ்வளவு பாதிப்பு என்பதையும், தேச நலன் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொண்டே, முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், ஆழ்ந்து சிந்தித்து, ஒரு முடிவை எடுத்து உள்ளோம். தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால், திரவ எரிவாயு, தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
வாழ்வாதாரம் பாதிக்கும்:
* எனவே, கெயில் நிறுவனம், விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் தற்போதைய திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்.

* குழாய்களை, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கெயில் நிறுவனம், ஏற்கனவே குழாய்களை பதிக்க, நிலங்களில் தோண்டியுள்ள குழிகளை, உடனடியாக சமன்படுத்தி, அந்நிலங்களை, அதன் முந்தைய நிலையில், விவசாயிகளிடமும், நில உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.

* விவசாயிகள், விவசாயப் பணிகளை தொடரும் வகையில், ஏற்கனவே பதித்த குழாய்களை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

* இத்திட்டத்தால், பழ வகை மரங்களையும், பிற கட்டுமானங்களையும் இழந்து வாடும் விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டை, கெயில் நிறுவனம் வழங்க வேண்டும்.

* தமிழக அரசின் முடிவுகள், ஐகோர்ட்டில் தெரிவிக்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய் பதிப்பு நடவடிக்கைகளை, கெயில் நிறுவனம் மேற்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு, திரவு எரிவாயு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும், கெயில் நிறுவனம் எடுக்க வேண்டும்.

* திட்டம் தொடர்பாக, விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும், திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* திட்டத்திற்காக, மக்கள் அல்ல; மக்களுக்காகவே திட்டம் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும், தமிழக அரசு, உடந்தையாக இருக்காது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

பி.கு: ஒரு செய்தியை அது முற்றுப்பெறும் வரை தெரிந்துவைத்திருக்கவேண்டுமென்பது என் ஆசை. அதன் விளைவுதான் இந்த முயற்சி.

நன்றி!

Friday 31 August 2012

காலஞ் செய்த கோலமடி!

           


           தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் ஈமு கோழி வளர்ப்பவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையுடன் வருடத்திய போனசும் வழங்கப்படுமென்ற பத்திரிக்கை விளம்பரங்களை நம்பி பணம் கட்டி சேர்ந்தவர்கள் பலர். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே அவர்களைக் கைவிட்டது அவர்கள் சேர்ந்த நிறுவனங்கள். இதன் விளைவாக, ஊடகங்களுக்கு ஒரு ஊழல் சென்சேசன் செய்தியும் ஏமாந்த பல பாமர ஜனங்களின் இல்லங்களில் கதறல் ஓலங்களும் கடந்த 2மாத காலத்தில் தமிழகத்தையே உலுக்கியது.

          இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம். ஈமு கோழி மருத்துவ குணம் மிக்கது என்றும் அதன் இறைச்சியும், அதிலிருந்து வரும் பை-புராடக்ட்சும் பல்வேறு நோய்களுக்கு மருந்தென்றும் மொத்தத்தில் இது வளர்ப்பது வருங்காலத்தில் லாபகரமானதென்றும் மிகத் துள்ளியமாகக் கணித்த சில அரைவேக்காடுகள் உடனடியாகக் களத்தில் குதித்தன.



அடிப்படைத் திட்டம்: ஈமு கோழி இறைச்சியை மக்களிடம் பிரபலப்படுத்தி விட்டால், பிராய்லர் கோழிக்கு மாற்றாக்கி அதன் மூலம் நாடெங்கும் இதனை மார்க்கெட்டிங் செய்து விடுவது என்பது தான் அவர்களின் ஆரம்ப யுக்தி. நல்லது தான்.

           மேற்கண்டவாறு செயல்படுத்தும் பட்சத்தில் பிராய்லரை விட பல மடங்கு விலையுள்ள ஈமுகோழிகளின் தேவை இன்றைய பிராய்லர் கோழி கறி விற்பனை அளவான, நாளொன்றுக்குப் பல லட்சம் கிலோக்கள் என தேவைப்படும் என்ற தொலைநோக்கு சிந்தனையும் சரியே! இதற்கான முதலீட்டையும் பராமரிப்புச் செலவுகளையும் நைசாகப் பேசி பொறுப்பை பலருக்கு பகிர்ந்து கொடுக்கும் காண்ட்ராக்ட் பார்மிங் தத்துவமும் சரியே!



என்னதான் பிரச்சினை?: முதலில் ஒரு ஓட்டல்(ஈமு கறி ருசியை மக்களுக்கு பழக்கப்படுத்த) ஒரு பண்ணை என்று ஆரம்பித்து அதில் நிறைவுகண்ட பின் படிப்படியாக அதை எல்லா ஊர்களுக்கும் விரிவாக்கம் செய்திருக்க வேண்டும். இதுதான் காலங்காலமாக விரிவாக்கம்(Extension) என்பதன் அடிப்படைத் தத்துவம். ஆய்வுக்கூடங்களில் பெற்ற வெற்றியை படிப்படியாக பீல்டுக்கு கொண்டு செல்வதும், அவற்றை கடைநிலை பண்ணை ஊழியனுக்கு கற்றுக் குடுப்பதும் இதனுள் அடங்கும். 

         இந்த அடிப்படைத் தத்துவத்தை மறந்து ஒரே பாட்டில் பெரியாளாக வேண்டுமென்ற நினைப்பில் எல்லோருக்கும் ஆசைகாட்டி பணத்தை வாங்கிக் கொண்டு ஆரம்பித்து விட்டனர். ஒரு திட்டத்தில் 100பேரைச் சேர்க்கிறோமென்றால் அதில் அனைவருமே முழுமையாக அதைப் புரிந்துகொண்டு சேர்ந்திருப்பதாக நினைத்தால் அது மூடத்தனம். 80-20 விதிப்படி, எந்த ஒரு குரூப்பிலும் 80சதவீதத்தினர் நம்பிக்கையுடனும் 20சதவீதத்தினர் அரைமனதுடனும் தான் இணைந்திருப்பார்கள். அந்த 20சதவீதத்தினரால் எந்நேரமும் பிரச்சினை வரக்கூடும். அதானால் கிரிசிஸ் மேனேஜ்மெண்ட் (Crisis Management) செய்வதற்குத் தேவையானவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


           அந்தப்பக்கம், மார்க்கெட்டிங்க் என்பது குதிரைக் கொம்பு. அதுவும் பிராய்லர் கறி ருசிகண்ட பூனைகளுக்கு திடீரென்று ஈமு கறியை காட்டி பழகச் சொல்வதென்பது மாயாண்டிக்கு பொன்னாத்தாவை விலக்கிவைத்து விட்டு ஐஸ்வர்யா ராயை கட்டிவைப்பது போன்றது. ஐஸ்வர்யா ராயுக்கு களை வெட்டவோ, கஞ்சிக் கழையம் சுமக்கவோ தெரியாது. அதனால், உலகத்திலேய் மிகச் சிறந்ததை குடுக்கிறோமென்றாலும் அது யாருக்கு, என்ன தேவையுடையவனுக்கு குடுக்கப் படுகிறதென்பதை முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும். 

            இப்படி எல்லாவற்றிலுமே அவசரப்பட்டு அகலக்கால் வைத்துவிட்டு அதனால் பல குடும்பங்களின் பாவத்தையும் கொட்டிக் கொண்டதே இந்த நவீன யுக வாழவைக்கும் தெய்வங்களின் தனித்தன்மை!

             இன்னும் நிறைய இருக்கிறது. வேண்டுவோர் கமெண்டில் கேட்டுத் தெரிந்து கொள்க!

             இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமே, இது போன்ற எந்தத் திட்டத்தையும் மேற்கண்ட எல்லா விவரங்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து பின் அவர்களிடன் முடிவெடுங்களெனக் கேட்டுக் கொள்வதே! 

            மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தில் ஈமு கோழிக்குப் பதில், நாட்டுக் கோழி, மருந்து வெள்ளரி, ஜட்ரோபா, அகர் மரம், மூலிகைச் செடிகள் வளர்ப்பு.... போன்ற அனைத்து வந்த வரப்போகும் திட்டங்களுக்கும் பொருத்திப் பார்த்துத் தெரிந்து கொள்க.

Wednesday 1 August 2012

வானவியல் பற்றி தமிழர்களின் அறிவு!





பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே..?!

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1()-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல் கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,

மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,

கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,

பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,

திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்
.


சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்வெளிப்படுகிறது

source: இணையத்திலிருந்து

Tuesday 31 July 2012

பூவே இளைய பூவே...!





கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

source: இணையத்திலிருந்து... 

Wednesday 20 June 2012

Life at certain times!




A man found a cocoon of an emperor moth. He took it home so that he could watch the moth come out of the cocoon. On the day a small opening appeared, he sat and watched the moth for several hours as the moth struggled to force the body through that little hole.

The moth seemed to be stuck and appeared to have stopped making progress. It seemed as if it had gotten as far as it could and it could go no farther. The man, in his kindness, decided to help the moth; so he took a pair of scissors and snipped off the remaining bit of the cocoon. The moth then emerged easily. But its body was swollen and small, its wings wrinkled and shriveled.




The man continued to watch the moth because he expected that, at any moment, the wings would enlarge and expand to and able to support the body, which would contract in time. Neither happened! In fact, the little moth spent the rest of its life crawling around with a small, swollen body and shriveled wings. It never was able to fly.

The man in his kindness and haste did not understand that the struggle required for the moth to get through the tiny opening was necessary to force fluid from the body of the moth into its wings so that it would be ready for flight upon achieving its freedom from the cocoon. Freedom and flight would only come after the struggle. By depriving the moth of a struggle, he deprived the moth of health.



 
Sometimes struggles are exactly what we need in our life. If we were to go through our life without any obstacles, we would be crippled. We would not be as strong as what we could have been. Give every opportunity a chance, leave no room for regrets, and don't forget the power in the struggle. 


 

கொயந்த புள்ளய்ங்களுக்கொசரம்!




Saturday 5 May 2012

நாட்டுப்புறத்தானாகிய நான்!


அதென்ன மாயமோ, என்னமோ தெரியறதுல்ல எனக்கெதுவுமே வெளங்கினதில்ல!

தமிழ்நாட்டுலயே அந்த கோர்ஸ் உள்ள ஒரே காலேஜ்ல சீட் வாங்கி உள்ளபோயி ஒக்காந்தா, எல்லாம் பெரிய எடத்து பச்சக்கிளிங்க! ஈரோடு பக்கமிருந்து தான் அதிகம்!

அவள் ஏதோ கேட்க, நான் ஏதோ சொல்ல, அருகிருந்தவள் “சரியான நோஸ் கட்டுடீ”ன்னா. எனக்கு எதுவுமே புரியல.

சிஸ்டர், சிஸ்டர்னு “நெருக்கமா” பேசிக்கிட்ருந்தாய்ங்க பீட்டர்களின் பேரன்கள். ”அக்கா” என்ற உறவு அதற்காகத்தான் ஆசிர்வதிக்கப் பட்டிருப்பதை அப்போதும் உணராமல்.

எல்லோரிடமும் சகஜமாகப் பழக நினைத்தேன், குரூப் குரூப்பாக ஜெராக்ஸ் எடுக்கச் சென்றார்கள். டீக்கடைக்குத் தான் செல்கிறார்களென்பதை அறிந்திலன்.

உடன்படித்த தேவதைகளெல்லாம் அருகே வந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதொ வினவ, அவர்கள் எதிர்பார்த்த பதிலைச் சொல்ல என்னிடம் இண்டலிஜென்ஸ் ரிப்போர்ட்(பின்புல ஆராய்ச்சிப் பொரணி) இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 3பேராவது என்னை நிறைய எதிர்பார்த்தார்களென்பது அடுத்த 5ஆண்டுகள் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை.

எந்த ஆசிரியரிடமும் வகுப்பைத் தவிற வேறு இடத்தில் சென்று பேசியதில்லை. எந்த நேரத்திலும் அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்ததில்லை. அவுத்துவிட்ட மாடு மாதிரி திரியிற இவனுக்கெதுக்கு மார்க்குன்னு பலபேர் எண்ணியிருக்கக் கூடும்.

எந்த ஒரு டூர் சென்றாலும் சின்ன ஹோட்டல் எங்க இருக்கு என்று தேடி அலைவதற்கே நேரம் சரியாயிருக்கும். (என்னையும் ஒரு குரூப் பின் தொடர்ந்ததென்றும், கன்னியாகுமரியில் அப்படிப்பட்டதொரு ஓட்டலில் புழுபூச்சி சாம்பார் சாப்பிட்ட கதையும் உண்டு) இதனாலேயே ஓட்டல்களை கண்ணாலேயே தேர்ந்தெடுப்பதில் வல்லமை பெற்ற திருவிளையாடலும் உண்டு

மாலை நேரங்களில் கடைத்தெருவில் சுற்ற “குபேரனின்” ஆசி இல்லாததால் விளையாட்டு மைதானமே கதி என்று அனைத்து விளையாட்டையும் கற்றுக் கொண்டதும் வரலாற்றில் உள்ளடக்கம்


எனக்குத் தெரிந்த எளிய வழியில் ஏன் அந்த காரியத்தை முடிக்கக் கூடாதென்று மேனேஜரிடம் வாதாடிய என்னை தனியாகக் கூப்பிட்டு எட்டிகொயட் கத்துக்கொடுத்த காலமும் உண்டு

கடைசியா, எல்லாத்தையும் விட்டுப்புட்டு சொந்தமா நாமே ஒரு தொழில ஆரம்பிப்போம்னு இந்தியா வந்தா, இங்க அட்வைஸ் எல்லாமே, “ஒரு ஸ்டேஜிக்கு வந்த பிறகு அதை மெய்ண்டைன் பண்ணனும் சார். அத விட்டுட்டு கேரியர் குரோத் கர்வ நோஸ்டைவ் அடிக்க விட்டு எர்ராட்டிக்கா லைப் கிராப் வரையக்கூடாது” என்று போதிமர தீட்சை அளிக்கும் நண்பர்களும் என்னுடனே!

சிந்தனையில் தெளிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் துணிவும் மட்டுமல்ல, சூழ்நிலையையும் கிரீனாக வைத்திருக்கும் போது தான் மனம் அமைதியடையும். வாழ்க்கை இறகாய் மிதக்கும்!

 
எவ்வளவோ பண்ணிட்டோம்.......

Tuesday 24 April 2012

காவியப் பெண்கள்!


 அட! அதுக்குள்ள கற்பனை குருதய தட்டிவிட்டு கண்ணகிக்கும் காத்தவராயனோட அம்மாவுக்கும் பறந்துடுறீங்க!

எங்க காலத்துல, ஏதுயா, புஸ்தகம், படிப்பு, பஜனை, கதாகாலட்சேபமெல்லாம்? எனக்குத் தெரிஞ்சதெல்லாம், சினிமா, அப்புறம் டிவி, டிவியில என்னன்னு கேக்குறீங்களா? அதுவும் சினிமாதேன். இப்படி எங்கும் சினிமா, எதிலும் சினிமான்னு நீக்கமற நிறைந்த ஒன்று தான் எங்கள் வாழ்வை நெறிப்படுத்த இறைவன் தந்த தற்கால நீதி நூல்!

சரி! ஆட்டைய ஆரம்பிப்போம். மொத சினிமாவுல வந்த பெண்களையும், பெண்களென்றால் என்ன என்று அது கற்றுக்கொடுத்த பாடத்தையும் பாப்போம்.

கடலோரக்கவிதைகள்ன்ற படத்துல, பாரதிராஜாங்கிற டைரக்கட்டர் என்னென்னமோ சொல்லிருக்காராம். எனக்கு ஒன்னும் வெளங்கல! ஆனா, என்னையும் அசர வச்ச ஒரே ஒரு ஆளு அதுல வாற ரெண்டாவது ஹீரோயினிதேன். ஒரு கட்டுமரத்துகிட்ட ஹீரோ சண்டை போட்டுக்கிட்ருக்கையில, ஓடியாந்து, ”மாமா! அவய்ங்க தப்பா பேசுனது ஜெனிபர் டீச்சர இல்ல, என்னியத்தான்னு” சொல்லி முடிக்கும் போது, பெண் என்ற வார்த்தையின் உயரம் என்னான்னு புரிஞ்சுக்க முடியுது. அதுக்குமேல அந்த படத்துல நடிச்ச யாரா இருந்தாலும் என் கண்ணுக்கு தெரியல. அதுல அவய்ங்க சொன்ன எந்த மேட்டரும் எனக்கு நெனவுல இல்ல.


அப்புறம், இப்ப ஒரு படம் வந்துச்சே! அதான், “தென்மேற்குப் பருவக்காற்று”ன்னு ஒரு படம். அதுலயும், செகண்டு ஹீரோயினி, “மாமா, எனக்கு எங்கப்பன் சேத்துவச்சதெல்லாம் கொண்டுவந்து தர்றேன். பத்தலன்னா, கடன் வாங்கிக்க! நான் நல்லா கூலிவேலை செய்வேன். கடனைக் கட்டிக்கலாம்”னு சொல்லி வாய்மூடல, என்கண்ணுல பொலபொலன்னு தண்ணி! நீ வேலைக்குப்போனா நானும் வேலைக்குப் போவேன், எனக்கும் எக்கனாமிகல் ப்ரீடம் வேணும்லங்கிற கேட்டகிரி இல்ல அது! ஒரு நாள் கல்யாணச் செலவுக்காக ஒரு ஆயுசு முழுக்க வேகாத வெயில்ல வெந்து வெண்ணச்சட்டியா சாகுறது அது! அந்த சீன, உத்துப்பாத்தாத் தெரியும், அவள் எம்புட்டுப் பெரிய பேரழகி, பெருந்தன்மையாழினி, எதற்கும் ஈடில்லாத ஒரு உயிர்(அரை மணி நேரமா இந்த எடத்துல என்ன வார்த்தை போடுறதுன்ன் தடுமாறி, கடுப்பாகி, இதப் போட்டு வச்சிருக்கேன். கண்டிப்பா, இது சரியான வார்த்தை இல்ல!) என்று புரியும்.

அதாகப்பட்டது; எனக்குத் தெரிந்த பெண் என்பதற்கான வரையறை அல்லது எடுத்துக்காட்டுகள் இப்படித்தான் அமைந்தன. பாக்யராஜ் படத்துல வர்ற ஓப்பன் டைப் ஹீரோயின்களோ, அல்லது ரஜினி டயலாக்ல வர்ற அடக்க, ஒடுக்க...... டைப்போ கிடையாது.

தொடரும்......

Tuesday 17 April 2012

வாழ நினைத்தால்.....


முன்னிருக்கையில் நீ, பின்னிருக்கையில் நான்!
உன்னருகில் கோவலன், என்னருகில் கும்பகர்ணன்!
அலைபாயும் கூந்தலில் அருவிக்கொத்தாய் முல்லைச் சரம்!
அறக்கப்பறக்க ஓடி வந்ததில் கலங்கிய குளமாய் என்முகம்!
அசைந்தது உன் சிரம், குலுங்கியதென்னவோ வாகனம்!
அழுத்தியழுத்தி அவனும் கேட்டுப்பார்த்தான், படியவில்லை நீ!
குனிந்து நிமிர்ந்து பார்க்கிறேன், கும்பகர்ணன் கொடுத்த இடைவெளியில் இவையெல்லாம்,

கூந்தலே பர்தாவாம், குறுக்கே ஆட்டும் தலையே விளக்கமாம்!
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிவிட்டான் அக்கயவன், அவசரமாய் வந்தமர்ந்தேன் உன்மடியில் பின், சரிந்து உன்னருகில்!
சினுங்கிச் சிதறினாய்! கோர்த்தனைத்தேன் மன்னிப்புக்கோரிக்கைகளால்!
போவதெங்கே அவசரமாய்!? ஆவலுடன் கேட்டது நீ! நிலைகுழைந்து சொருகிய கண்களைக் குவித்துச் சொன்னேன், பக்கத்தில் தான்!
எனக்கொரு டிக்கெட் அந்தப்பக்கம் சொன்னது நீ! சொல்லியவாய் மூடவில்லை, பாராசூட்டில்லாமல் குதித்தது நான்!

பின்னங்கால்கள் பிடறியில் பட பிடித்தேன் ஓட்டம் கீழிறங்கி!
முக்கால் மணி நேரம், மூன்று மைல் தூரம், மூன்று வீதிகள் அதிகமாகவே ஓடியிருக்கிறேன் முழித்துப்பார்த்தபோது!

அடுக்களைக்குள் அவள்! அலட்சியப்படுத்தாமல், அடுத்த அறைக்குள் நுழைந்த என்னை அழைத்தாள் நக்கலாக!

இன்னிக்கு பர்ஸ மறந்துட்டுப் போனீங்களே? பஸ் பாஸ், பைக்குள் இருந்ததா? உயிர் போனாலும் கடன் வாங்கேன் என்பீரே! ஆறு மணிக்குள் திரும்பாவிட்டால் மாலைக்கண் மானம் தூற்றுமென்பதறியீரோ?
சிட்டுக்குருவி லேகியமென்று இத்தனை நாளாய் குழந்தையின் சப்பட் லோசனை தின்றிருக்கீரே! என்ன செய்ய உம்மை?
........
தலைக்குள் ராட்டினமும், கண்களுக்குள் கருமேகமும், ஒருசேர வந்து திரள, சத்தமின்றிச் சாய்ந்தது சோபாவில், ஒண்டிப்புலி!

Friday 13 April 2012

இழப்பதற்க்கென்று இறுதியாய் ஒன்று...





பேய் மழையென்று யாரோ சொன்னது அப்போதுதான் நினைவுக்கு வந்தது கூந்தையனுக்கு! இருட்டுக்குள் மெல்ல நகர்ந்து சரிந்து வந்தவனுக்கு ஓரமாக ஒண்டிக்கொண்டிருந்த பூங்கொடியின் கை தட்டுப்பட்டது. ஐயோ! ராசா ஒனக்கு இன்னுமா ஒரக்கம் வரலை, கூரை ஓம்பக்கம் ஒழுகலைன்னு நெனைச்சேன், ஒழுகுன தண்ணி ஒன்னிய உசுப்பு விட்ருச்சாயா? வாயா வா! வந்து ஆத்தா மடிமேல படுத்துக்கஎன்று விம்மிய நெஞ்சுடன் வாரியணைத்து மடிமீது வைத்து உடல் குறுக்கி, இதமாய் உறங்கவைத்தாள்.

காக்காயன் ஓடிவந்தான். கூந்தையா! ஒங்கப்பன கல்லு போட்டு அமுக்கி கொண்டுபுடுச்சாம்டா! கொவாரில வேட்டு வச்சப்ப!என்று மூச்சிரைக்க சொல்லி முடித்தான். அவன் நம்மை ஏதோ சொல்லி திட்டுவது போல் தோன்றியதோ என்னவோ, அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. இழ்ந்தது எதுவென்றே தெரியாமல் முதன் முதலாக அவன் அழுதுகொண்டே தெரு நெடுகிலும் பிஞ்சுக்கால்களை புழுதியில் பதித்தபடி அம்மாவைத் தேடி ஓடிக்கொண்டிருந்தான்.

ரெண்டாங்கிளாஸ்ல யாருடா கூந்தையன்றதுஅலறினார் செம்பட்டை வாத்தியார். எல்லோர் முன்னிலையிலும் தன்னை மட்டும் அவர் பேர்சொல்லி கூப்பிட்டதில் கை கால்கள் வெடவெடக்க எழுந்து நின்றவனுக்கு, என்ன நடந் த தென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந் த து. காதெல்லாம் ஏதோ ஒரு நிசப்த ரீங்காரம் அரங்கேறிக்கொண்டிருந்தது. காக்காயன் எழுந்து இருவரின் மஞ்சப் பைகளையும் தேடி எடுத்து சிலேட்டைத் திணித்துக் கொண்டு இவனையும் பிடித்து இழுத்தவாறு நடந்தான். வீடு நெருங்க நெருங்க விருட்டென்று விலக்கிக்கொண்டு அம்மா என்றவாறு தாயிடம் அடைக்கலம் தேடிச்சென்றவனை, சுற்றி உட்கார்ந்து அழுதுகொண்டிருந்த பெண்கள் தடுத்து நிறுத்தி, ஒங்காத்தா ஒன்னிய நட்டாத்துல விட்டுட்டு போயிட்டாடான்னு சொன்னது மட்டும் அழுத்தம் திருத்தமாய் ஒலித்தது ஓலங்களுக்கிடையே!

நாலு வருசத்துல ரெண்டு எழவாடா ஒங்க வீட்டுல? எதுக்கும் நீ நாளைக்கிருந்து எங்கூட கல்லொடைக்கிற எடத்துக்கு வா! ஓன் தம்பிக்கும் ஒனக்கும் அங்கயே கூலு கரைச்சு கொண்டுக்கு வந்துர்றேன். இங்கணயே ஒக்காந்து கஞ்சிக்கி வீடுவீடாப் போயி கையேந்திக்கிட்ருக்காதீங்கடா!அதிகாரமாய் ஒலித்தது சூடாமணி கிழவியின் ஆதங்கம். அப்பன் ஆத்தா உறுதுணை இல்லைன்னாலும் கிழவிகளுக்குப் பஞ்சமில்லைடா இந்த ஊருல! தங்கத்தாயி ஆத்தா வெளித்திண்ணையிலிருந்து!

எங்க போனான்டா ஓந்தம்பி சப்பானி! கெரட்டையன் மகள் வீரம்மாள கழுத்தறுத்துப் போட்டுட்டு போயிருக்கான்டா. ஊருக்குள்ள ஒங்கள வெறிபுடுச்சுத் தேடிக்கிட்ருக்காய்ங்கடா எளந்தாரிகளெல்லாம்! வேகமா ஓடியாடா!வென்று வெரசுபடுத்திக்கொண்டு முன்னே ஓடிக்கொண்டிருந்தான் காக்காயன். வெட்டுப்பட்டுக் கை கால்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்தவைகளெல்லாம் ஒவ்வொன்றாய் இணைத்து தம்பியாய் அடையாளப்படுத்தும் முயற்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன.

கல்யாணத்தன்னிக்கு ஒன்னிய கூப்புட வேணாமுன்னு எங்காத்தாகாரி தான்டா எழவக்கூட்டிட்டா! அந்த வெளங்காத பய வம்சத்துல சாவுகாசம்(சகவாசம்) வைக்காதடான்டா! கேக்குறானா? ஒனக்கு எவனும் இத்தனை வருசமா பொண்ணுகுடுக்காததுக்குக்கூட நீயும் அவனும் சேர்ந்து சுத்துறது தான்டா காரணம்! ஏலே! சொன்னதக்கேக்கலன்னா இங்கனயே நாண்டுக்கு செத்துப் போவன்டா! கூந்தையனின் சமூக அடையாளத்தைப் பற்றித் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தான் காக்காயன். இருந்த வீட்டையும் காக்காயனுக்கு தாரைவார்த்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருந்தான் கூந்தையன்.

எலும்பும் தோலுமாய் இருந்த கிழவரிடம், டாக்டரய்யா, பேரென்னப்பா? என்றவுடன் இருமலைத் தொடர்ந்ததொரு ஈனஸ்வரம் கரைந்தது கூந்தையனென்று. டிபி சீக்கு முத்துறவரைக்கும் என்ன பெரிசு பண்ணிக்கிட்ருந்த? சரி சரி! போ! போயி நர்ஸம்மாகிட்ட இந்த ஊசியும் மாத்திரையும் எடுத்துத்தரச்சொல்லி வாங்கிக்கிட்டுப் போ! எந்த மாத்திரையா இருந்தாலும் வகுத்துக்கு கஞ்சியோ கூலோ குடிச்சிட்டு முழுங்கு! புவர் பெல்லோ!

என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை, முத்து முத்தாக பத்து தூக்கமாத்திரைகள் கையில் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன. சிறுகச்சிறுக தன்னை தனித்துப் பிரித்து, இறுதியில் இருப்பதற்கொரு பெரிய சத்திரத்தையும் 4நாள் பசிக்காக பத்து மாத்திரைகளையும் சிருஷ்டித்த கடவுளைப் பார்த்து கடைசியாக ஏதோ சொல்ல நினைத்தவன், சுதாரித்துக்கொண்டு, கையைவிட்டுப் போவதற்குளாகவே அவசர அவசரமாய் முழுங்கிவிட்டான் மாத்திரை வரங்களை!

சத்திரத்தைக் கூட்டுமொரு பரதேவதை வந்து உற்றுப் பார்த்துவிட்டு, நிலைகுத்தி நின்ற கண்ணும், நெடுஞ்சாண் கிடப்பும், நெற்றியின் வெளிர்ப்பும், மந்தாகசப் புன்முறுவலும், மார்புக்கூடும் உற்றுப் பார்த்து ஒப்புவைத்தாள், ஊருக்கே கேட்குமாறு நெஞ்சில் அடித்துக்கொண்டு..., 

....யாத்தே! எந்தக் காட்டுப் பெயமகனோ? எந்தச் சிறுக்கி பெத்துப் போட்டாலோ? இப்பிடி அனாமத்தா அனாதப் பொணமா கெடக்கானே சிய்யான்!
தேர்கட்டித்தூக்க ஒனக்கெத்தன பிள்ளையோ!? தீப்பந்தம் புடிக்க எத்தன பேரனோ!?
எத்தனை ஊரக் கட்டி ஆண்டயோ? எத்தனபேரு ஒனக்கு சேவகம் செஞ்சாய்ங்களோ? எந்தூரு ராசாவோ?
........

இழப்பதற்கென வேறொன்றுமில்லையென்பேனென நினைத்தாயோ பரமனே!
இறுதியாய்! இதோ உனக்காய், ஆர்ப்பரிக்கும் கடலுடன்! அழகிய வனங்களுடன்! ஆயிரம் வேதனை சுமக்கும் மாந்தர்களுடன்! நான் வாழ நீ படைத்த உலகு உனக்கே!
ம்! நிமிர்ந்து பார்! வாங்கிக்கொள்!

Saturday 7 April 2012

10 கமாண்ட்மெண்ட்ஸ்!




1) நாங்கள் இருவரும் குடும்ப வாழ்க்கை என்ற வகுப்பில் இன்று முதல் பதிவு செய்து கொண்டு எங்களது ஆராய்ச்சியை துவங்குகிறோம். 

2) எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் ஆராய்ச்சியையோ ஆராய்ச்சி விலங்கையோ கைவிட மாட்டோமென்று உறுதியளிக்கிறோம்.

3) எங்களுக்குள் கருத்துவேற்றுமைகளையும் அவற்றின் அளவுகளையும் மிகச்சரியாக குறித்துக்கொண்டு அதற்கான தகுந்த மருந்துகளை செலுத்திக்கொள்வோம் என உறுதி கூறுகிறோம்.

4) எங்கள் இருவரின் செல்போன்களின் உரையாடல்களை இன்றுமுதல் பதிந்து கொள்ள அரசிற்கோ மற்ற நிறுவனங்களுக்கோ உரிமை அளிக்கிறோம்(செல்போன் மூலம் செல்லுமிட விவரங்கள் உட்பட).

5) எங்களுக்குளான விவகாரங்கள் எப்போதாவது நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே வருமாயின், எங்கள் இருவரின் பெற்றோரையும் கீழ் குறிப்பிட்டுள்ள இரண்டு உறவினர்களையும், இரண்டு நண்பர்களையும் இருவர் தரப்பிலிருந்தும் விசாரணைக்கு உட்படுத்தவோ, தண்டிக்கவோ மற்றும் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளவோ அவர்களின் ஒப்புதலோடு நான் இங்கு முன்னிருத்துகிறேன்.


6) நாங்கள் இருவரும் இனி வேறெந்த தலைப்பிலும் வாழ்க்கை ஆராய்ச்சியை மாற்றிக்கொள்ளவோ, சிந்திக்கவோ, ஒப்புக்கொள்ளவோ நேர்ந்தால் எங்களது பேரன் பேத்திகளுக்கு கல்யாணம் முடிந்தபின்பே அதை ஒப்புக்கொள்வோமெனவும் மீறினால் எங்களை செவ்வாய் கிரக புதுக்குடியமர்த்தலில் உபயோகித்துக்கொள்ளலாமென்றும் உறுதி கூறுகிறோம்.

7) பணத்தையோ, வசதியையோ, ஆடம்பர வாழ்க்கையையோ நாங்கள் விரும்பினால் அதற்கான முன்னோடியை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு அவைகளை பெற்றுக்கொள்வோமெனவும் உறுதியளிக்கிறோம்.

8) குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் யோசித்து கொண்டிராமல், வங்கிகளில் சம்ர்ப்பிப்பது போல், முன்னரே ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் தயாரித்துக்கொடுத்துவிட்டு அதற்கான ஈட்டுப்பத்திரங்களையும் காட்டி ஒப்புதல் பெற்றே குழந்தை பெற்றுக்கொள்வோம்.

9) அன்னியப் பெண்களையோ ஆண்களையோ எங்கள் குடும்ப உள்நாட்டு விவகாரங்களில் தலையிட விடாமல் எங்கள் இறையாண்மையைக் காக்க பாடுபடுவோம்.

10) நாங்கள் இருவரும் மனமொத்து பிரியும் தருணத்தில் இருவரும் சேர்ந்து தாஜ்மகாலின் அளவு, அழகு மற்றும் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை நாங்களே இணைந்து எங்கள் கைகளால் கட்டிக்கொடுத்த பின்பே பிரிந்து செல்வோம். 


பி.கு: இவற்றில் செய்யவேண்டிய மாற்றங்களையோ, சேர்க்கப்பட வேண்டியவைகளையோ அனைவரும் சிரத்தையெடுத்துச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்!


Saturday 10 March 2012

ஐ.நா.வில் அமெரிக்க தீர்மானம்!

அமெரிக்க தீர்மானம், இலங்கை திரைக்கதை எழுதி தயாரித்த கற்றுக் கொண்ட பாடங்கள் சிபாரிசுகளுக்கு அப்பால் போகவில்லை - மனோ கணேசன்


ஐ.நா வின் தரூஸ்மன் அறிக்கையை அடிப்படையாக வைத்து அல்ல. இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதைவிடுத்து இத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச சதி என பொய்ப்பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் முகமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

அவர் அந்த அறிக்கையில்,
அமெரிக்காவின் தீர்மானம், மேற்குலக நாடுகளின் இலங்கைக்கு எதிரான சர்வதேசசதி முயற்சி என சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் பிரச்சாரம் செய்தது. இலங்கை தலைவர்களை உலக போர்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தி மின்சார நாற்காலியில் உட்கார வைக்கும் முயற்சி என்று சொல்லப்பட்டது. இவை அனைத்தும் அப்பட்டமான வடிகட்டின பொய்கள் என இன்று நிரூபணமாகியுள்ளன.

அதேபோல், அமெரிக்க தீர்மானம் இலங்கை அரச தலைவர்களுக்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை கொண்டுவர போகிறது என்று சில தரப்பினரால் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. போரின் இறுதி கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களுக்குக்கு நியாயம் பெற்று தரும் தீர்மானம் வரபோகின்றது எனவும் சொல்லப்பட்டது. ஐநா மனித உரிமை ஆணைக்குழு விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே கூட்டு செயற்பாடு எதிலும் ஈடுபடாமல் வெளியிடப்பட்ட இத்தகைய கனவு கருத்துகளும் இன்று பிழைத்துவிட்டன.

உண்மையில் அமெரிக்க தீர்மானத்தில் எந்த ஒரு இடத்திலும் மருந்துக்குகூட, ஐநாவின் தாருஷ்மன் அறிக்கையை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதுதான் உண்மை. இது இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள வெற்றி. அதேவேளையில் இது ஏதோ மாபெரும் சர்வதேச சதி என்று சிங்கள மக்களிடம் காட்டி உள்நாட்டு தேசிய பொருளாதார மற்றும் விலைவாசி பிரச்சினைகளை திரை போட்டு மூடும் சந்தர்ப்பத்தையும் மேலதிகமாக இந்த தீர்மான செய்தி அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது.

தமது கற்றுக்கொண்ட ஆணைக்குழு சிபாரிசுகளை அமுல்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கம் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவுடன் கூட்டு இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருப்பது ஒன்றுதான் கொஞ்சமாவது தமிழ் மக்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இதை அடிப்படையாககொண்டுதான் தமிழ் தரப்பு அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.

இதில் இன்று இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும் நகைச்சவையாக அமைந்துள்ளது. உண்மையில் இந்த தீர்மானம் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானமே அல்ல. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் அடிக்கடி இலங்கையிலும், இந்தியாவிலும் பேசிவருவதாக சொல்லப்படும் இந்திய அரசாங்கம், இந்த மிகச்சாதாரண தீர்மானம் தொடர்பில்கூட இன்னமும் உறுதியான நிலைப்பாடு எடுக்கவில்லை.

நமது கட்சியை பொறுத்த வரையில் நாம் ஒருபோதும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோல் அதை நாம் முற்று முழுதாக நிராகரிக்கவும் இல்லை. எனவே இந்த ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசுகள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமுலாக்கப்படுவதை நாம் கண்காணிப்போம். அதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு, தோழமை கட்சிகளுடன் இணைந்து நாம் வழங்குவோம். என்றார்.

Saturday 25 February 2012

தற்காலக் கற்பித்தல் முறை!



A Professor explained Marketing to MBA students

1. You see gorgeous girl in party,
you go to her & say I am rich marry me
That's Direct Marketing.

2. You attend party & your friend goes to a girl & pointing at you
tells her. He' is very rich, marry him - That's Advertising.

3. Girl walks to you & says u are rich, can u marry me?
"That's Brand Recognition"

4. You say I m very rich marry me & she slaps u
"That's Customer Feedback"

5. You say I m very rich marry me & she introduces you to her husband
"That's Demand & Supply Gap"

6. Before you say I m rich, marry me, your wife arrives
That's Restriction from Entering New Market.

source: Theni District
பி.கு: இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்கப்பிடாது! புரபசரா இருந்தா பார்ட் டைம் மேரேஜ் அசெம்ப்ளரா இருக்கக்கூடாதா என்ன?

Wednesday 8 February 2012

என் பூர்வீகம்!


                         நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர் " இறையனார் அகப்பொருள் " என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் " அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய " மதுரையில் " கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் " அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!

நன்னி: Gowtham Kadhirvel 

Tuesday 24 January 2012

தெரியாத சில உண்மைகள்!








ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை............................................................................................................................................................. வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:* பகலில் முகப்பு விளக்குகளை
எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
*
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது
வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
*
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து
விளக்குகளையும் எரியவிடக் கூடாது.
*
ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.
*
ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.
*
ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த
அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.
*
கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.
*
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.
*
வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
*
கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.
*
நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி
வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'
செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
*
நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
athhanifa