Wednesday 7 December 2011

வாரணம் நூறு!

             சங்க இலக்கியத்தில் யானைக்கு வழங்கப்பட்ட பெயர்கள் >100            


யானை
வேழம்
களிறு -ஆண்யானை
மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
பிடி - பெண்யானை
கரி
வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
அத்தி - (பிங்கல நிகண்டு)
அத்தினி
அதவை - போர் யானை
அரசுவா
அல்லியன்
அனுபமை
ஆம்பல்
ஆனை 

இபம் - திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
இரதி
இராசகுஞ்சரம் / குஞ்சரம்
இருள்
தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
வல்விலங்கு
மாதங்கம்
உம்பல் - சான்று
உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)

கலபம்

அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)

அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை

உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை

எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)

ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை

ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.

கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.

கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.

ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)

கசேந்திரன் - சிறந்த யானை.

குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.

கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)

ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.

ஓங்கல் - யானை. (அக. நி.)

கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)

கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)

கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).

கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)

கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)

கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)

கருமா -

கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )

கள்வன் - பிங்கல நிகண்டு

களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)

கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)

கஜம் = கெசம்

காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)

கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)

கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)

குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)

கும்பி - (திவாகர நிகண்டு)

குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)

குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).

கைம்மலை - கையை உடைய மலை(அக. நி.)

நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)

கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).

கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)

சத்திரி - யானை. (சங். அக.)

சாகசம் - யானை. (அக. நி.)

சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)

சிந்துரம் - (சூடா.)

சுண்டாலம் - (யாழ். அக.)

சூகை - (அக.நிக)

தந்தாயுதம்

தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).

தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.

தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.

தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை

தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)

திண்டி - (அக.நிக)

தீர்க்கமாருதம் - (யாழ். அக.)

தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)

தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)

துருமாரி - (யாழ். அக.)

துவரிதழ் - (அக.நிக)

துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)

தூங்கல் - (திவாகர நிகண்டு)

தெட்டி - (அக.நிக)

தெள்ளி - (அக.நிக)

நகரகாதம் - (யாழ்.நிக)

நகரசம் - (யாழ்.நிக)

நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)

நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)

நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.

நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)

நூ - (அக.நிக)

நூழில் (சூடாமணி நிகண்டு)

நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).

பகடு - பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5)
பஞ்சநகாயுதம்
பஞ்சநகம்
பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
பண்டி (அக.நி.)
பவளக்கொம்பன்
பிக்கம்= யானைக்கன்று (யாழ். அக.)
பிணிமுகம்
பிரளயம்

பிள்ளுவம்

பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை

புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)

பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)

புழைக்கை - (திவாகர நிகண்டு)

பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).

பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).

பெருமா - (பிங்கல நிகண்டு)

பென்னை - (சங். அக.)

பேசகி - (சங். அக.)

பேசிலம் - (யாழ். அக.)

பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)

போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)

மகாகாயம் - (யாழ். அக.)

மகாதந்தம் - (யாழ். அக.)

மகாநாதம் - (யாழ். அக.)

மகாமிருகம் - (யாழ். அக.)

மத்தகுணம் - (யாழ். அக.)

மதங்கம் - (யாழ். அக.)

மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)

மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)

மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).

மதமா - (பிங்கல நிகண்டு)

மதவிருந்தம் - (யாழ். அக.)

மதாரம் - (யாழ். அக.)

மதாவளம் - (பிங்கல நிகண்டு)

மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)

மந்தமா - (சூடாமணி நிகண்டு)

மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)

மருண்மா - (திவாகர நிகண்டு)

மறமலி - (திவாகர நிகண்டு)

மா - (அக.நி.)

மாதிரம் - (பிங்கல நிகண்டு)

முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.

மையன்மா - (இலக். அக.)

மொய் - (பிங்கல நிகண்டு)

யாளி - (அக.நி.)

யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)

யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)

யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)

வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)

வராங்கம் - (யாழ். அக.)

வருணம் - (யாழ். அக.)

வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)

வழுவை - (சூடாமணி நிகண்டு)

வியாளம் - கெட்டகுணமுள்ள யானை

விராணி - (சங். அக.)

வேதண்டம் - (பொதி. நி.)

அருணம் - (அக. நி.)

அழுவை - (அக. நி.)

அறுகு - ((பொதி. நி.)

இமழி - (அக. நி.)

உத்தரி - (அக. நி.)

ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)

ஏரம்பம் - (நாமதீப.)

ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)

கரமை - (சங். அக.)

களம் - கொம்பில்லா யானை

கேழல் - (அக. நி.)

சூர்ப்பகன்னம் - (அக. நி.)


3 comments:

  1. எங்கிருந்து திரட்டினீர்கள்..!? அருமை அற்புதம்.. ! இதைதான் தேடிக்கொண்டிருந்தேன்..! குஞ்சிரம் என்பது மலையாள வழக்கு என்பதும் உண்டு..! குஞ்சம் வைத்த வாலை குறிப்பதும் உண்டு. நல்ல முயற்சி.. அருமையான பதிவு..!

    ReplyDelete
  2. இந்த காலத்துல எங்க பிரிண்டட் புக். எல்லாம் நெட்டுல இருந்து எடுத்தது தான்! என்சாய்!

    ReplyDelete