Labels

Showing posts with label கொலமுயற்சி. Show all posts
Showing posts with label கொலமுயற்சி. Show all posts

Thursday, 1 August 2013

இருட்டறைக்குள் முரட்டுக்குத்து

வெள்ளை நிற டெம்போ டிராவலர் வண்டி ஹைதராபாத்தை விட்டு நாகார்ஜூன சாகரை நோக்கி ஊர்ந்து சென்றுகொண்டிருந்ததது. கண்ணாடி ஜன்னல்களெல்லாம் திரையிட்டு மூடப்பட்டிருந்ததால் உள்ளே நடப்பது வெளியே தெரியாது.

ரோட்டோரமாக வண்டியை நிறுத்தி உள்ளிருந்து காவல்துறை சீருடையணிந்த இருவர் இறங்கியதும் அசீத் கேட்டான்,
“டேய் விசை! இதுக்குப்பேரு தான் இருட்டறைக்குள் முரட்டுக் குத்தாடா”

இங்கு தொடங்குகிறது நம் கதை!

”ஏண்டா! இன்னுமாடா நீங்க திருந்தல?” கேட்டது பெருந்தொப்பை ஏட்டைய்யா.

”அப்டி என்னதான் சார் தப்பு பண்ணாய்ங்க?” டிபார்ட்மெண்டின் புதுவரவு ஏட்டைய்யா.

மொளகா வத்தல் கடைக்கார செட்டியாரு வரும் போது இந்த அசீத் குமார் பெய தும்மிருக்கான். அவரு வீட்டுக்குப்போனதும் நாண்டுக்கு தொங்கிட்டாரு.

ஐய்யய்யோ! அந்த அளவுக்கு போயிருச்சா ஏட்டைய்யா? சரி கூட இருக்கவன் என்ன செஞ்சான்?

அவந்தான்யா பதில் தும்மல் தும்மிருக்கான்.

ஓ! அப்ப கன்பார்ம் தும்மல் விசையோடதுன்னு சொல்லுங்க.

அட! ஆமாய்யா! நம்ம இன்ஸ்பெக்ட்ரு சார் பத்தி தெரியும்ல? அவரு அணைக்கட்டுக்கு கூட்டி போனவன் எவனும் உசுரோடவோ பொணமாவோ கூட திரும்பினதில்ல.

அதான் ஒனக்கு அடிச்சு பிராக்டிசு ஆகட்டுமேன்னு வழிநெடுக அடிக்கவிட்டு கூட்டியாந்தேன்.

இதற்கிடையே இருள்சூழ் வண்டிக்குள்….

அசீத்து, ஏண்டா நேரங்காலந்தெரியாம! இங்க வர்றதுக்குப் போயி இம்புட்டு பவுடர அப்பிருக்க?

விசையண்ணே! நீங்க மட்டும் என்னவாம்? எதுக்கு பச்சை சட்டை செகப்பு பேண்ட் போட்டு வந்திருக்கீங்க?

எப்டியோ என்கவுண்டர் பண்ணதுக்கப்புறம் பொணத்தோட மூஞ்சிய குளோசப்ல டிவில காட்டும் போது ஒரு பொண்ணுக்காச்சும் புடிக்கும்ல. செத்தும் கரெக்ட் பண்ணிய காவியக் கட்டழகன்னு இச்டீடீ பேசவேணாமா? அதுக்குத்தான்.

கரெக்ட் கரெக்ட்! 

சரி, நீ எதுக்கு இந்த பேண்ட் சட்டை போட்டு வந்தன்னு சொல்லு?

பச்சை சட்டை போட்டவன பக்கத்துல வச்ச சுடுறதுக்கும் மத்தவய்ங்கள ஓடவிட்டு சுடுறதுக்கும் பழகுனவறாம் இந்த இன்ஸ்பெக்டரு. ஒரு புக்ல படிச்சிருக்கேன்.

அடத்துரோகி!

டேய்! என்னடா அங்க சத்தம்? இன்ஸ்பெக்டரய்யா வரச்சொல்றாரு. எறங்கி வாங்கடா!

சரக் சரக்…..

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…..

ஊ ஊஊஊ ஊஊஊ….

தம்பிங்களா! ஒங்க ரெண்டுபேத்தையும் ஏன் நான் இங்க கொண்டுவந்தேன் தெரியுமா?

என்னையும் விசையையும் என்கவுண்டர் பண்ணத்தானங்யா? பண்ணுங்கய்யா பண்ணுங்க? ஆனா, கடைசியா ஒருதடவ காயத்ரி மந்த்ரம் சொல்லி கங்காஸ்நானம் பண்ணிக்கிட அனுமதி கொடுங்கய்யா. போற எடத்துக்கு புண்ணியமா....

மன்னிச்சிருங்க தம்பிகளா. ஒங்கள கூட்டிவந்தது என்கவுண்டருக்காக இல்ல. நீங்க பண்ண சமுதாயச்சீர்கேட்டால ஒரு உயிர் போயிருச்சு. அதுவும் மொளகா வத்தக்கடை ஓனரு. ஊருக்குள்ள பெரியமனுசன். அதனால, 
மொளகாக்கடை செட்டியார்கள் சங்கத்துல இருந்து எங்களுக்கு ரொம்ப பிரசரு. வேற வழியில்லாம ஒங்க ரெண்டுபேத்தையும் அரெஸ்ட் பண்ணிட்டோம். எங்களுக்கு இதத்தவிற வேற வழி தெரியல.

சார்!!!!!!!!!!!!! 

ஆமா! தம்பிகளா. எனக்கும் மகன் மகள் இருக்காங்க. என் சொந்தத்துலயும் ஒன்னமாதிரி பெரிய மூக்கு வச்ச தும்மல்வாதிகள் இருக்காங்க. அதெல்லாம் நெனச்சுத்தான்…..

விசைக்கு தலை கொடராட்டினம் போல் சுத்தியது. பொத்தென்று விழுந்தான்.

தண்ணி தெளித்து எழுப்பியதும்,

“இரண்டுபேரும் பொடி நடையா நடந்து ஊரு வந்து சேருங்க. அதுக்குள்ள ஊரு சகஜநிலைக்குத் திரும்பிரும்”னு இன்ஸ்பெக்டர் சொல்லி வாய்மூடல… ரெண்டு தம்பிகளும் ரெண்டுகாலையும் கட்டிபுடிச்சுக்கிட்டு கதற ஆரம்பித்திருந்தார்கள்.

ஐயா! இன்ஸ்பெக்டரய்யா! தெய்வமே! ஊருக்குள்ள ஏகப்பட்ட கடன். எப்படியாவது நீங்க என்கவுண்டர் பண்ணிடுவீங்கன்ற தைரியத்துல மிஞ்சஞ்சொச்ச ஆளுக கிட்டயும் கடன வாங்கி பவுடர் டப்பாவும் புதுச்சட்டை பேண்ட்டும் போட்டுக்கிட்டு பகுமானமா வந்துட்டோம். இப்டி கைவிட்டீங்கன்னா நாங்க எங்க போவோம்? எங்களுக்கு யாரத்தெரியும்? எங்களுக்கு தற்கொலை பண்ணக்கூட புரசீசர் தெரியாதே சாமீ!?

என்க்கவுண்டரய்யா! நீங்க அப்டியெல்லாம் திடீர்னு நல்லவரா மாறக்கூடாது. கொஞ்சம் பழச நெனச்சுப்பாருங்க. நீங்க ஒரு சிங்கம். இப்டி நீங்களெல்லாம் நல்லவங்களா இருப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா திண்டுக்கல்ல இருந்து மௌன இன்ஸ்பெக்டரவாச்சும் வரச்சொல்லி ரெக்வஸ்ட் லெட்டர் குடுத்திருப்போம்ல. இப்டி கடைசி நிமிசத்துல கால வாரி விடுறது ஒரு 
பொறுப்புள்ள அதிகாரிக்கு அழகா? ஐயா! எங்க பொண்டாட்டி கொழந்த குட்டிகளெல்லாம் உங்க போட்டோவ வச்சு கும்புடும். தயவுசெஞ்சு துப்பாக்கிய எடுங்கய்யா. தயவுகாட்டுங்க கருணாமூர்த்தியே!

அனைவரது முகத்திலும் ஒரு கலவரம்.

டிக்
டிக்
டிக்
.
.
.
நிசப்தம்

திடீரென இன்ஸ்பெக்டர் வாகனத்தைத் தாண்டி காட்டுக்குள் ஓட ஆரம்பித்திருந்தார்.
.
,
,
சில மாதங்களுக்குப் பிறகு,

ஐயா, காடு புல்லா தேடிட்டோம். தடயவியல் நிபுணர்கள வச்சு தேடுனதுல மொத்தம் 6 கால் தடம். 4 நம்மாளுகளோடது. 2 செருப்பில்லாத கால் தடம். ஒவ்வொரு ஒரு மாச இடைவெளில சூ போட்ட கால் தடங்களும் செருப்பில்லாத கால் தடங்களும் புதுசா பதிஞ்சுகிட்டே இருந்திருக்கு. தொல்லியல் துறையோட அறிக்கைப்படி, நமக்கு கடைசியா கிடைச்ச கால் தடத்தோட கடைசி 

பதிவு இன்னைக்கு காலைல 5.30க்கு.
.
.
.

வரும்!

வரும்!
வரும்!
வரும்!

Thursday, 14 March 2013

மாட்டுக்கார வேலா ஓன் மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடா!


நெஞ்சு பொறுக்கு திலையே! – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சியஞ்சிச் சாவார் இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் ……………….
………….
கண்ணிலாக் குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே – இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்
நெஞ்சு…..


எப்பவோ, பாரதியாருன்னு ஒரு பெருசு பாரத ஜனங்களோட இன்னைக்கி நெலமய நொண்டிச்சிந்துல பாடிவச்சிட்டு போச்சாம். ஆளு கிளிசோசியம் பாத்து பொழச்சிருக்கும்போல. அப்டியே அச்சு அசலா நம்மூர்ல இன்னைக்கு நடக்குறத சொன்னமாதிரியே சொல்லிருக்குடா.


அதுசரிடா மண்டையா? ஊருக்குள்ள என்ன பிரச்சினையாம்? – ஒன்னாப்பு படிக்கிற பயக மட்டமத்தியான வெயில்ல டவுசரோட கஞ்சிதண்ணியில்லாம கோசம்போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்காய்ங்கண்ணே, பள்ளிக்கோடத்துக்குள்ள போகாம.

எதுக்காம்?

ஏதோ எலங்கபட்டி பிரச்சினையாம்.

அதுக்கு இவய்ங்களுக்கு என்னவாம்?

அதான்ணே எனக்கும் தெரியல?

பள்ளியோடத்துகுள்ள போலன்னா எலங்கபட்டில 
மழைபேஞ்சுருமா?

எவனாச்சும் மைய தடவி ஒக்கார வச்சிருப்பானோண்ணே?

சரி என்னதான் வேணுமாம் அவய்ங்களுக்கு?

அந்த ஊருல எல்லா ஜனங்களும் ஒன்னாமின்னா சந்தோசமா இருக்கணும்னுதானாம்ணே!

நல்லவிசயந்தான? அதுல என்ன தப்பிருக்கு? இப்ப என்னாவாம்?

அந்தூரு தெக்குத்தெருவுகாரய்ங்க வடக்குதெருவுகாரய்ங்கள அடிச்சு வெரட்றாய்ங்களாம்ணே. பொம்பளபிள்ள பிஞ்சு பொடுசுன்னுகூட பாக்காம சகட்டுமேனிக்க அடிச்சு வெரட்டி கொன்றுக்காய்ங்கண்ணே!

சரி! அதுக்குன்னு நம்மூர்ல பள்ளியோடத்து போகாம இருந்தா என்ன கெடைக்கப்போகுதாம்? அந்தூரு தெக்குத்தெருவுகார ஆளு எதுவும் வாத்தியாரா இருக்கா?

பள்ளியோடத்தபத்தி எனக்கென்னணே தெரியும்?! ஆனா இத நான் கேட்டதுக்கு ஒரு அர டிக்கட்டு, “உங்க ஊரு தெருக்கொழாயில குடிதண்ணி வரலன்னா எதுக்கு மெயின் ரோட்டுக்கு போயி பஸ்ஸ மறிக்கிறீங்க? பஸ்லயா தண்ணி வருது? அது எதுக்குன்னு சொல்லு இதச்சொல்றேன்னு சொல்லிட்டு போய்ட்டான்ணே”. இனிமேல் இவய்ங்ககிட்ட வாய குடுக்கக்கூடாதுண்ணு அப்பவே எனக்கு ஒறச்சுருச்சுண்ணே!

எல்லாஞ்சரிதான்டா! ஆனா, இப்டி கொடிபுடுச்சுக்கிட்டே இருந்தா எல்லாஞ் சரியாகிடுமா?

ம்க்கும்! இதத்தேன் வண்டிக்கார தானாபானா கேட்டாராம்.  எல்லாப்பெயலும் சிலேட்டுகுச்சிய தூக்கி எறிஞ்சு வெரட்டிருக்காய்ங்க.

ஆமா! அதுவுஞ்சரி தான! அந்தாளுக்கு என்ன தெரியப்போகுது கஞ்சிதண்ணியில்லாம கத்தி கோசம்போடுறதப்பத்தி. முன்னப்பின்ன குடிச்சிருந்தாத்தான டாஸ்மார்க் பார்ல மொச்சப்பயறு வெல தெரியும்?

சரி! ஒரு ஊர்ல ஒன்னாப்புகாரய்ங்க பள்ளியோடம் போகலன்னு எல்லா ஊர்லயும் ஒன்னாப்பு ஒதுங்கியிருப்பு ஆகிடுச்சு. அப்புறம்?

அப்புறமென்ன, எல்லாரும் பக்கத்து ஊரு கம்மா கரயில ஒன்னுகூடி கோசம் போட போறாய்ங்களாம்.

ஓ! கொள்ளப்பெயலுக கூடப்போறாய்ங்கன்னு சொல்லு? அப்புறம்?

அப்புறமென்ன, அப்டியே கொஞ்சங்கொஞ்சமா, கா பரிச்ச வந்துருச்சு, வாத்தியார் சொன்னாரு அங்க போகாத, ஆயா சொன்னா இங்க போகாதன்னு கழண்டுக்கிருவாய்ங்கண்ணே.

ஆனா, அப்டி தெரியலயேடா? எனக்கென்ன தோணுதுனா, எல்லாவீட்லயும் பள்ளியோடம் போற ஜாதி இருக்குடா! அவய்ங்கள பெத்தவங்களும் ஒணந்து அவங்கவங்க வேலைவெட்டிக்கு போற பண்ணைகள்ல இதே மாதிரி கோசம் போடுவாய்ங்களோ? அப்டி இல்லன்னா, இந்த பயலுக போயி இவய்ங்களமாதிரியே ஒத்துவாழ்ற ஜாதியான வயக்காட்டுவேலைக்காரய்ங்க, கெணறுவெட்றவய்ங்க, கெடையமத்துறவய்ங்க, இப்டி எல்லா கூட்டத்தோடயும் கலந்து பேசி ஒன்னுசேத்ருவாய்ங்களோ? அப்டியே அந்தச்சொந்தம் இந்தச்சொந்தம்னு ஒன்னு சேர்த்தா, மொத்த ஊரே தெரண்ட மாதிரி தான? ஊரே தெரண்டுருச்சுன்னா, நம்ம பண்ணையார்னால மிசுங்கமுடியாதுல? அப்டி வர்றாய்ங்களோ?

அது இருக்கட்டும்ணே, இது என்ன உள்ளூர் வெவகாரமா, பண்ணையாரவச்சு நம்ம பஞ்சாயத்துல பேசி தீக்குறதுக்கு? பிரச்சன 18 பட்டி பஞ்சாயத்துக்கு போயிருச்சாம்லணே?

அடே! மண்டையா, 18அங்க, பட்டியில பெரிய பட்டிக்காரன் என்னமோ கணக்குப்போட்டு, எதாவது ஒன்ன சொல்லிக்கிட்ருப்பான். நாம அதெல்லாம் நம்பக்கூடாது. நம்ம பண்ணையார வச்சு அவங்க ஊர சாம, பேத, தான, தண்ட உபாயங்கள ஏவிவிட்டு வழிக்கு கொண்டுவந்துரணும்டா! அதுக்குத்தாண்டா இம்புட்டும்.

நம்ம பண்ணைக்கு அம்புட்டு எசக்கு இருக்காணே?

என்னடா இப்டி கேட்டுப்புட்ட? இந்தா இருக்க 500 தலக்கட்டுள்ள ஒத்தக்காவித்தி பெயலுக ஊர ஒழுங்குபடுத்த தெறமில்லன்னா பெறகெதுக்கு 5000 தலக்கட்டு ஊரு? அதுக்கொரு பண்ணையாரு?

ஏன்ணே? இதெல்லாம் தப்பில்லையா? அவங்க ஊர்ல போயி நம்ம???? 

ஏன்டா, பங்களாபட்டியில ஊர் புகுந்து பொண்ணத்தூக்குனது யாருன்னு மறந்துட்டியா? நம்ம பண்ணையோட சிய்யாந்தாண்டா? அன்னைக்கி அது தப்பா தெரிஞ்சிருந்துருக்கலாம். ஆனா, அத தப்புன்னு இன்னைக்கு எவனாச்சும் சொல்வானா? ஆப்புகானாபட்டியில பெரியபட்டி மிராசு ஒரண்டையிழுத்தப்ப வண்டிமாடு ஆளு அம்போட போனது யாரு? நம்ம பெயக தான? நம்ம பண்ணை சொல்லித்தான?

அப்ப என்னண்ணே செய்யச்சொல்றீங்க?

“எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவமென்ப திழுக்கு”

அப்டீன்னு நம்ம பண்ணையோட பாட்டன் சொல்லிருக்கான்டா. 
புரிஞ்சா பொழச்சுக்க. இல்லாட்டி போயி பொழப்பப்பார்றா!


எருமை கன்டுக்குட்டியுடன்,
மாட்டுக்கார வேலன்.

Saturday, 6 October 2012

Artificial rice to reach market


Theresa Sufa, The Jakarta Post, Bogor | Jakarta | Mon, September 03 2012, 5:35 AM

Agriculture Minister Suswono has launched food products made from local plants that have been developed by the Bogor Agricultural Institute (IPB) to support food diversification.

“We don’t need to worry about food scarcity because we have an abundance of natural and human
resources. What we need now is more innovation as the number of fields for agriculture is limited,” he said during the launch at the campus on Saturday.

Researchers at the IPB have produced food products that have been processed to have similar characteristics to food made from rice.

By adding fiber, antioxidant substances or other ingredients, the artificial rice that can be made from corn, sorghum, sago and tubers is ideal for a customized diet.

The researchers describe the products as “analog rice” because they have analogous characteristics to conventional rice.

Suswono said that with such innovations, the archipelago had no reason to worry about food shortages, especially when extreme weather occurred.

Slamet Budijanto, the IPB’s director of agriculture technology and one of the product researchers, said that analog rice had made it to the 2011 list of 103 innovations in the country and had also received an award from the West Java administration.

“We hope in the future for private-sector involvement in the production of analog rice to support national food sustainability,” he said.

Slamet said that two months ago, Depok administration had ordered 250 kilograms of the artificial rice, adding that soon the West Java administration would also order it.

The advantages of artificial rice are that it can be cooked through both conventional and modern means, and people do not need to wash it before use.

But the price is still expensive, ranging from Rp 9,000 (99 US cents) to Rp 14,000 per liter, depending on the ingredients used to make the rice. Due to its cost, the product is aimed at middle-to-upper class consumers.

Such a product had previously been studied by several other universities and research centers in China and the Philippines.

Indonesia, the world’s third-largest rice producer after China and India, with a population of 240 million, annually consumes 139 kilograms per capita. But it has been unable to maintain self-sufficiency and relies a lot on imports of the staple food as stockpiles have fallen and harvests failed to meet targets.

The government has set a target of a surplus of 10 million tons of rice in 2014 as part of the rice-self sufficiency program it launched several years ago.

தங்கத் தமிழ் நாட்டினிலே....



"தமிழனை ஏமாளியாக்கும் புதுத் திட்டம் - கட்டாயம் படியுங்கள் பரப்புங்கள்"


இணையதள நண்பர்களே இது நீங்கள் கட்டாயமாக படிக்கவேண்டிய செய்திபடித்துவிட்டு அனைத்து தமிழ் வாழ் நேசங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்(Please SHARE or TAG Tamil friends). விழிப்புணர்வை தூண்டுங்கள்நமக்கு உணவளிக்க நாள் முழுவதும் பாடுபடும் விவசாய மக்களுக்கு ஆதரவு தாருங்கள்

புதுதிட்டம்:
நதிநீர், மின்சாரம், மீனவர் பாதுகாப்பு, அரசியல
் பிரதிநிதித்துவம் என்று எல்லாவற்றிலும் இரண்டாம்தர குடிமக்களாய் நடத்தப்படும் தமிழகத்தின் ஏமாளிதனத்தின் இன்னொரு அடையாளம் கெயில் (GAIL) காஸ் லைன் பதிப்பு திட்டம்.
கேரளா-கொச்சியில் இருந்து கர்நாடக-பெங்களூருவிற்கு தமிழ்நாடு வழியாக காஸ்லைன் செல்கிறது. இதனால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். காஸ் விற்பதால் வரிப்பயன்&வேலை பெறுவது கேரளா, அதை வாங்கி பயன்படுத்துவது கர்நாடகா இருந்தும் நம் நிலங்களுக்குள் பைப்லைன் வர காரணம் அம்மாநில விவசாயி/அரசு எதிர்பா? இல்லை தமிழர் என்ற இளக்காரமா..??

ஏழு மாவட்ட(!) விவசாய நிலங்களுக்குள் இந்த பைப் செல்வதால் அந்த நிலத்தில் விவசாய கட்டுப்பாடு வரும். அதாவது தண்ணீர் பாய்ச்சகூடாது; மழை பெய்தால் அதைக்கொண்டு பயிர் செய்யலாம்; உழுதல் கூடாது; மரம்,வீடு,ரோடு கூடாது. அந்த பைப்லைனுக்கு பாதிப்பென்றால் அந்த விவசாயிதான் பொறுப்பு! எப்படி நியாயம்?? இதற்கு அவர்கள் தரும் இழப்பீடு ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய்!

ஒரு வயதான விவசாயி, நில உரிமையாளர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழி பறிப்பதும் நிலம் அளப்பதும் கண்டு கேள்வி கேட்டவரை திஹார் ஜெயிலுக்கு போறியா?? XXX, ஓடீறு..!!”. கூலிக்கு இருக்கும் ஒரு கடைநிலை ஊழியனுக்கே இவ்வளவு துணிச்சல் எனில் அந்த நிர்வாகத்துக்கு தமிழ்விவசாயி என்றால் எவ்வளவு அலட்சியம் கற்பிக்கபட்டிருக்கும்?
தமிழகம் வழியாக வரகூடாது என்ற கழுதை கோரிக்கை தேய்ந்து, ரயில் தட ஓரத்திலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கொண்டு செல்லுங்கள். விவாசயத்தை அழிக்காதீர்கள், விவசாயிகளுக்கான கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்ற கட்டெறும்பு கோரிக்கை வைத்தாலும் ஏற்க மறுக்கிறார்கள். இவர்கள் சொல்லும் காரணம் தமிழகம் வழியாக வந்தால் 310கிமீ; கேரளா, மைசூரு வழியாக வந்தால் 470கிமீ. ஆனால் வரைபடத்தை பார்த்தால் எது குறைந்த தூரம் என்பது விளங்கும். அந்த பாதையைவிட தமிழக பாதையில் மலைகளும் வனப்பகுதியும் அதிகம்.

விவசாய நிலத்துக்குள்தான் ரோடு, ரயில், ரியல்எஸ்டேட், காஸ்லைன், தொழிற்சாலை அனைத்தும் வருமா? இதற்கான போராட்டம் வலுத்து வரும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஆதரவளிக்க வேண்டும். எல்லா மாவட்ட விவசாயிகளும் வேறுபாடுகள் மறந்து ஓரணியில் நிற்க வேண்டும். இணைய தமிழர்களும் தங்கள் ஆதரவை காட்ட வேண்டும்.

Source: I love Tamilnadu 


தினமலர், மார்ச் 25, 2013


சென்னை: ""கெயில் நிறுவனம், விளைநிலங்கள் வழியாக, எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும். வேளாண் நிலங்களில் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரம், எரிவாயு குழாய்களை பதிக்க, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.
சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம், நேற்று துவங்கியது. கேள்வி நேரத்திற்குப் பின், தி.மு.க., உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., டில்லிபாபு, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர், கெயில் விவகாரம் தொடர்பாக, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
ஏழு மாவட்டங்கள் பாதிப்பு: இந்த விவாதங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில் உரை: தமிழக அரசு, மக்களுக்காக இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் வகுக்கப்படும் திட்டங்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக இருந்து வருகிறது. கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து, பெங்களூரு வரை, தமிழகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய, ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் கீழே, 310 கி.மீ., தூரத்திற்கு, எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள, கெயில் நிறுவனம் திட்டமிட்டது.
விவசாயிகள் எதிர்ப்பு: இருபது மீட்டர் அகலத்தில், குழாயை பதிக்க, 5,842 பட்டாதாரர்களுக்கு சொந்தமான, 1,491 ஏக்கர் நிலத்தின் பயன்பாட்டு உரிமையை பெற, கெயில் நிறுவனம், நடவடிக்கை எடுத்தது. இதற்கான இழப்பீட்டுத் தொகை, நிலத்தின் சந்தை மதிப்பில், 10 சதவீதம் ஆகும். இத்திட்டம், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுத்தப்படுகிறது என்றும், இதனால், விவசாயிகளுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்றும், ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம், 28ம் தேதி, அமைச்சர்களுடனும், உயர் அதிகாரிகளுடனும், நான் ஆலோசனை நடத்தினேன். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, விவசாயிகளிடம், கருத்துகள் கேட்கப்பட்டன. தலைமைச் செயலர் நடத்திய இந்த கூட்டங்களில், 134 கிராமங் களில் இருந்து, 2,428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். "எரிவாயு குழாய் அமைப்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம், மிகக் கடுமையாக பாதிக்கப்படும். விவசாய நிலத்தின் பெரும்பகுதி பயன்பாட்டு உரிமையை, கெயில் பெறுவதால், எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய இயலாமல், நிலத்தின் பெரும் பகுதியை இழக்க நேரிடும்' என்பது உள்ளிட்ட, 10 கருத்துகளை வலியுறுத்தி உள்ளனர்.
கெயிலுக்கு என்ன பிரச்னை...: கடந்த 8ம் தேதி, கெயில் நிறுவனம், தமிழக அரசு தலைமை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலைவழியாக, குழாய் பதிக்கும் திட்டத்தை மேற்கொண்டால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை, விளக்கமாக கூறி உள்ளது. நிறுவனத்தின் கருத்துகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சேபனைகள் ஆகியவற்றை, தமிழக அரசு, கவனமாக பரிசீலித்தது. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொள்ள முடியாததற்கு, வலுவான தொழில்நுட்ப காரணங்கள் எதையும், கெயில் நிறுவனம் தெரிவிக்கவில்லை. மாறாக, விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரம், எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை, தெள்ளத் தெளிவாக கூறி உள்ளனர். விவசாயிகளின் வீழ்ச்சியில், தொழில் வளர்ச்சி ஏற்படுவதை, நியாய உணர்வு கொண்ட யாரும், ஏற்க மாட்டார்கள். ஒரு திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் எனில், அதனால், யாருக்கு, எவ்வளவு பாதிப்பு என்பதையும், தேச நலன் எவ்வளவு பாதிக்கப்படும் என்பதையும் கருத்தில் கொண்டே, முடிவு எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில், ஆழ்ந்து சிந்தித்து, ஒரு முடிவை எடுத்து உள்ளோம். தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய்கள் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால், திரவ எரிவாயு, தொழிற்சாலைகளுக்கும், மக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்படுவதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.
வாழ்வாதாரம் பாதிக்கும்:
* எனவே, கெயில் நிறுவனம், விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்கும் தற்போதைய திட்டத்தை, உடனடியாக கைவிட வேண்டும்.

* குழாய்களை, தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில், நெடுஞ்சாலைகளின் ஓரமாக பதிப்பதற்கு, கெயில் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கெயில் நிறுவனம், ஏற்கனவே குழாய்களை பதிக்க, நிலங்களில் தோண்டியுள்ள குழிகளை, உடனடியாக சமன்படுத்தி, அந்நிலங்களை, அதன் முந்தைய நிலையில், விவசாயிகளிடமும், நில உரிமையாளர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.

* விவசாயிகள், விவசாயப் பணிகளை தொடரும் வகையில், ஏற்கனவே பதித்த குழாய்களை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

* இத்திட்டத்தால், பழ வகை மரங்களையும், பிற கட்டுமானங்களையும் இழந்து வாடும் விவசாயிகளுக்கும், நில உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டை, கெயில் நிறுவனம் வழங்க வேண்டும்.

* தமிழக அரசின் முடிவுகள், ஐகோர்ட்டில் தெரிவிக்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலை வழியாக, குழாய் பதிப்பு நடவடிக்கைகளை, கெயில் நிறுவனம் மேற்கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திற்கு, திரவு எரிவாயு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும், கெயில் நிறுவனம் எடுக்க வேண்டும்.

* திட்டம் தொடர்பாக, விவசாயிகள் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும், திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* திட்டத்திற்காக, மக்கள் அல்ல; மக்களுக்காகவே திட்டம் என்பதில், தமிழக அரசு உறுதியாக உள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும், தமிழக அரசு, உடந்தையாக இருக்காது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

பி.கு: ஒரு செய்தியை அது முற்றுப்பெறும் வரை தெரிந்துவைத்திருக்கவேண்டுமென்பது என் ஆசை. அதன் விளைவுதான் இந்த முயற்சி.

நன்றி!

Friday, 31 August 2012

காலஞ் செய்த கோலமடி!

           


           தமிழ்நாட்டில் ஒப்பந்த அடிப்படையில் ஈமு கோழி வளர்ப்பவர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையுடன் வருடத்திய போனசும் வழங்கப்படுமென்ற பத்திரிக்கை விளம்பரங்களை நம்பி பணம் கட்டி சேர்ந்தவர்கள் பலர். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே அவர்களைக் கைவிட்டது அவர்கள் சேர்ந்த நிறுவனங்கள். இதன் விளைவாக, ஊடகங்களுக்கு ஒரு ஊழல் சென்சேசன் செய்தியும் ஏமாந்த பல பாமர ஜனங்களின் இல்லங்களில் கதறல் ஓலங்களும் கடந்த 2மாத காலத்தில் தமிழகத்தையே உலுக்கியது.

          இதன் பின்னணியைக் கொஞ்சம் பார்ப்போம். ஈமு கோழி மருத்துவ குணம் மிக்கது என்றும் அதன் இறைச்சியும், அதிலிருந்து வரும் பை-புராடக்ட்சும் பல்வேறு நோய்களுக்கு மருந்தென்றும் மொத்தத்தில் இது வளர்ப்பது வருங்காலத்தில் லாபகரமானதென்றும் மிகத் துள்ளியமாகக் கணித்த சில அரைவேக்காடுகள் உடனடியாகக் களத்தில் குதித்தன.



அடிப்படைத் திட்டம்: ஈமு கோழி இறைச்சியை மக்களிடம் பிரபலப்படுத்தி விட்டால், பிராய்லர் கோழிக்கு மாற்றாக்கி அதன் மூலம் நாடெங்கும் இதனை மார்க்கெட்டிங் செய்து விடுவது என்பது தான் அவர்களின் ஆரம்ப யுக்தி. நல்லது தான்.

           மேற்கண்டவாறு செயல்படுத்தும் பட்சத்தில் பிராய்லரை விட பல மடங்கு விலையுள்ள ஈமுகோழிகளின் தேவை இன்றைய பிராய்லர் கோழி கறி விற்பனை அளவான, நாளொன்றுக்குப் பல லட்சம் கிலோக்கள் என தேவைப்படும் என்ற தொலைநோக்கு சிந்தனையும் சரியே! இதற்கான முதலீட்டையும் பராமரிப்புச் செலவுகளையும் நைசாகப் பேசி பொறுப்பை பலருக்கு பகிர்ந்து கொடுக்கும் காண்ட்ராக்ட் பார்மிங் தத்துவமும் சரியே!



என்னதான் பிரச்சினை?: முதலில் ஒரு ஓட்டல்(ஈமு கறி ருசியை மக்களுக்கு பழக்கப்படுத்த) ஒரு பண்ணை என்று ஆரம்பித்து அதில் நிறைவுகண்ட பின் படிப்படியாக அதை எல்லா ஊர்களுக்கும் விரிவாக்கம் செய்திருக்க வேண்டும். இதுதான் காலங்காலமாக விரிவாக்கம்(Extension) என்பதன் அடிப்படைத் தத்துவம். ஆய்வுக்கூடங்களில் பெற்ற வெற்றியை படிப்படியாக பீல்டுக்கு கொண்டு செல்வதும், அவற்றை கடைநிலை பண்ணை ஊழியனுக்கு கற்றுக் குடுப்பதும் இதனுள் அடங்கும். 

         இந்த அடிப்படைத் தத்துவத்தை மறந்து ஒரே பாட்டில் பெரியாளாக வேண்டுமென்ற நினைப்பில் எல்லோருக்கும் ஆசைகாட்டி பணத்தை வாங்கிக் கொண்டு ஆரம்பித்து விட்டனர். ஒரு திட்டத்தில் 100பேரைச் சேர்க்கிறோமென்றால் அதில் அனைவருமே முழுமையாக அதைப் புரிந்துகொண்டு சேர்ந்திருப்பதாக நினைத்தால் அது மூடத்தனம். 80-20 விதிப்படி, எந்த ஒரு குரூப்பிலும் 80சதவீதத்தினர் நம்பிக்கையுடனும் 20சதவீதத்தினர் அரைமனதுடனும் தான் இணைந்திருப்பார்கள். அந்த 20சதவீதத்தினரால் எந்நேரமும் பிரச்சினை வரக்கூடும். அதானால் கிரிசிஸ் மேனேஜ்மெண்ட் (Crisis Management) செய்வதற்குத் தேவையானவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


           அந்தப்பக்கம், மார்க்கெட்டிங்க் என்பது குதிரைக் கொம்பு. அதுவும் பிராய்லர் கறி ருசிகண்ட பூனைகளுக்கு திடீரென்று ஈமு கறியை காட்டி பழகச் சொல்வதென்பது மாயாண்டிக்கு பொன்னாத்தாவை விலக்கிவைத்து விட்டு ஐஸ்வர்யா ராயை கட்டிவைப்பது போன்றது. ஐஸ்வர்யா ராயுக்கு களை வெட்டவோ, கஞ்சிக் கழையம் சுமக்கவோ தெரியாது. அதனால், உலகத்திலேய் மிகச் சிறந்ததை குடுக்கிறோமென்றாலும் அது யாருக்கு, என்ன தேவையுடையவனுக்கு குடுக்கப் படுகிறதென்பதை முதலில் தெரிந்துவைத்திருக்க வேண்டும். 

            இப்படி எல்லாவற்றிலுமே அவசரப்பட்டு அகலக்கால் வைத்துவிட்டு அதனால் பல குடும்பங்களின் பாவத்தையும் கொட்டிக் கொண்டதே இந்த நவீன யுக வாழவைக்கும் தெய்வங்களின் தனித்தன்மை!

             இன்னும் நிறைய இருக்கிறது. வேண்டுவோர் கமெண்டில் கேட்டுத் தெரிந்து கொள்க!

             இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கமே, இது போன்ற எந்தத் திட்டத்தையும் மேற்கண்ட எல்லா விவரங்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து பின் அவர்களிடன் முடிவெடுங்களெனக் கேட்டுக் கொள்வதே! 

            மேலே குறிப்பிட்டுள்ள விளக்கத்தில் ஈமு கோழிக்குப் பதில், நாட்டுக் கோழி, மருந்து வெள்ளரி, ஜட்ரோபா, அகர் மரம், மூலிகைச் செடிகள் வளர்ப்பு.... போன்ற அனைத்து வந்த வரப்போகும் திட்டங்களுக்கும் பொருத்திப் பார்த்துத் தெரிந்து கொள்க.

Wednesday, 1 August 2012

வானவியல் பற்றி தமிழர்களின் அறிவு!





பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை நம்பி கொண்டிருந்த பொழுது அதே தாலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே..?!

தாலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1()-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல் கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,

மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,

கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,

பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,

திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்
.


சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்வெளிப்படுகிறது

source: இணையத்திலிருந்து

Tuesday, 31 July 2012

பூவே இளைய பூவே...!





கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகு

source: இணையத்திலிருந்து... 

Wednesday, 20 June 2012

Life at certain times!




A man found a cocoon of an emperor moth. He took it home so that he could watch the moth come out of the cocoon. On the day a small opening appeared, he sat and watched the moth for several hours as the moth struggled to force the body through that little hole.

The moth seemed to be stuck and appeared to have stopped making progress. It seemed as if it had gotten as far as it could and it could go no farther. The man, in his kindness, decided to help the moth; so he took a pair of scissors and snipped off the remaining bit of the cocoon. The moth then emerged easily. But its body was swollen and small, its wings wrinkled and shriveled.




The man continued to watch the moth because he expected that, at any moment, the wings would enlarge and expand to and able to support the body, which would contract in time. Neither happened! In fact, the little moth spent the rest of its life crawling around with a small, swollen body and shriveled wings. It never was able to fly.

The man in his kindness and haste did not understand that the struggle required for the moth to get through the tiny opening was necessary to force fluid from the body of the moth into its wings so that it would be ready for flight upon achieving its freedom from the cocoon. Freedom and flight would only come after the struggle. By depriving the moth of a struggle, he deprived the moth of health.



 
Sometimes struggles are exactly what we need in our life. If we were to go through our life without any obstacles, we would be crippled. We would not be as strong as what we could have been. Give every opportunity a chance, leave no room for regrets, and don't forget the power in the struggle. 


 

கொயந்த புள்ளய்ங்களுக்கொசரம்!




Saturday, 5 May 2012

நாட்டுப்புறத்தானாகிய நான்!


அதென்ன மாயமோ, என்னமோ தெரியறதுல்ல எனக்கெதுவுமே வெளங்கினதில்ல!

தமிழ்நாட்டுலயே அந்த கோர்ஸ் உள்ள ஒரே காலேஜ்ல சீட் வாங்கி உள்ளபோயி ஒக்காந்தா, எல்லாம் பெரிய எடத்து பச்சக்கிளிங்க! ஈரோடு பக்கமிருந்து தான் அதிகம்!

அவள் ஏதோ கேட்க, நான் ஏதோ சொல்ல, அருகிருந்தவள் “சரியான நோஸ் கட்டுடீ”ன்னா. எனக்கு எதுவுமே புரியல.

சிஸ்டர், சிஸ்டர்னு “நெருக்கமா” பேசிக்கிட்ருந்தாய்ங்க பீட்டர்களின் பேரன்கள். ”அக்கா” என்ற உறவு அதற்காகத்தான் ஆசிர்வதிக்கப் பட்டிருப்பதை அப்போதும் உணராமல்.

எல்லோரிடமும் சகஜமாகப் பழக நினைத்தேன், குரூப் குரூப்பாக ஜெராக்ஸ் எடுக்கச் சென்றார்கள். டீக்கடைக்குத் தான் செல்கிறார்களென்பதை அறிந்திலன்.

உடன்படித்த தேவதைகளெல்லாம் அருகே வந்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதேதொ வினவ, அவர்கள் எதிர்பார்த்த பதிலைச் சொல்ல என்னிடம் இண்டலிஜென்ஸ் ரிப்போர்ட்(பின்புல ஆராய்ச்சிப் பொரணி) இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 3பேராவது என்னை நிறைய எதிர்பார்த்தார்களென்பது அடுத்த 5ஆண்டுகள் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை.

எந்த ஆசிரியரிடமும் வகுப்பைத் தவிற வேறு இடத்தில் சென்று பேசியதில்லை. எந்த நேரத்திலும் அவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்ததில்லை. அவுத்துவிட்ட மாடு மாதிரி திரியிற இவனுக்கெதுக்கு மார்க்குன்னு பலபேர் எண்ணியிருக்கக் கூடும்.

எந்த ஒரு டூர் சென்றாலும் சின்ன ஹோட்டல் எங்க இருக்கு என்று தேடி அலைவதற்கே நேரம் சரியாயிருக்கும். (என்னையும் ஒரு குரூப் பின் தொடர்ந்ததென்றும், கன்னியாகுமரியில் அப்படிப்பட்டதொரு ஓட்டலில் புழுபூச்சி சாம்பார் சாப்பிட்ட கதையும் உண்டு) இதனாலேயே ஓட்டல்களை கண்ணாலேயே தேர்ந்தெடுப்பதில் வல்லமை பெற்ற திருவிளையாடலும் உண்டு

மாலை நேரங்களில் கடைத்தெருவில் சுற்ற “குபேரனின்” ஆசி இல்லாததால் விளையாட்டு மைதானமே கதி என்று அனைத்து விளையாட்டையும் கற்றுக் கொண்டதும் வரலாற்றில் உள்ளடக்கம்


எனக்குத் தெரிந்த எளிய வழியில் ஏன் அந்த காரியத்தை முடிக்கக் கூடாதென்று மேனேஜரிடம் வாதாடிய என்னை தனியாகக் கூப்பிட்டு எட்டிகொயட் கத்துக்கொடுத்த காலமும் உண்டு

கடைசியா, எல்லாத்தையும் விட்டுப்புட்டு சொந்தமா நாமே ஒரு தொழில ஆரம்பிப்போம்னு இந்தியா வந்தா, இங்க அட்வைஸ் எல்லாமே, “ஒரு ஸ்டேஜிக்கு வந்த பிறகு அதை மெய்ண்டைன் பண்ணனும் சார். அத விட்டுட்டு கேரியர் குரோத் கர்வ நோஸ்டைவ் அடிக்க விட்டு எர்ராட்டிக்கா லைப் கிராப் வரையக்கூடாது” என்று போதிமர தீட்சை அளிக்கும் நண்பர்களும் என்னுடனே!

சிந்தனையில் தெளிவும், எடுத்த காரியத்தை முடிக்கும் துணிவும் மட்டுமல்ல, சூழ்நிலையையும் கிரீனாக வைத்திருக்கும் போது தான் மனம் அமைதியடையும். வாழ்க்கை இறகாய் மிதக்கும்!

 
எவ்வளவோ பண்ணிட்டோம்.......

Tuesday, 24 April 2012

காவியப் பெண்கள்!


 அட! அதுக்குள்ள கற்பனை குருதய தட்டிவிட்டு கண்ணகிக்கும் காத்தவராயனோட அம்மாவுக்கும் பறந்துடுறீங்க!

எங்க காலத்துல, ஏதுயா, புஸ்தகம், படிப்பு, பஜனை, கதாகாலட்சேபமெல்லாம்? எனக்குத் தெரிஞ்சதெல்லாம், சினிமா, அப்புறம் டிவி, டிவியில என்னன்னு கேக்குறீங்களா? அதுவும் சினிமாதேன். இப்படி எங்கும் சினிமா, எதிலும் சினிமான்னு நீக்கமற நிறைந்த ஒன்று தான் எங்கள் வாழ்வை நெறிப்படுத்த இறைவன் தந்த தற்கால நீதி நூல்!

சரி! ஆட்டைய ஆரம்பிப்போம். மொத சினிமாவுல வந்த பெண்களையும், பெண்களென்றால் என்ன என்று அது கற்றுக்கொடுத்த பாடத்தையும் பாப்போம்.

கடலோரக்கவிதைகள்ன்ற படத்துல, பாரதிராஜாங்கிற டைரக்கட்டர் என்னென்னமோ சொல்லிருக்காராம். எனக்கு ஒன்னும் வெளங்கல! ஆனா, என்னையும் அசர வச்ச ஒரே ஒரு ஆளு அதுல வாற ரெண்டாவது ஹீரோயினிதேன். ஒரு கட்டுமரத்துகிட்ட ஹீரோ சண்டை போட்டுக்கிட்ருக்கையில, ஓடியாந்து, ”மாமா! அவய்ங்க தப்பா பேசுனது ஜெனிபர் டீச்சர இல்ல, என்னியத்தான்னு” சொல்லி முடிக்கும் போது, பெண் என்ற வார்த்தையின் உயரம் என்னான்னு புரிஞ்சுக்க முடியுது. அதுக்குமேல அந்த படத்துல நடிச்ச யாரா இருந்தாலும் என் கண்ணுக்கு தெரியல. அதுல அவய்ங்க சொன்ன எந்த மேட்டரும் எனக்கு நெனவுல இல்ல.


அப்புறம், இப்ப ஒரு படம் வந்துச்சே! அதான், “தென்மேற்குப் பருவக்காற்று”ன்னு ஒரு படம். அதுலயும், செகண்டு ஹீரோயினி, “மாமா, எனக்கு எங்கப்பன் சேத்துவச்சதெல்லாம் கொண்டுவந்து தர்றேன். பத்தலன்னா, கடன் வாங்கிக்க! நான் நல்லா கூலிவேலை செய்வேன். கடனைக் கட்டிக்கலாம்”னு சொல்லி வாய்மூடல, என்கண்ணுல பொலபொலன்னு தண்ணி! நீ வேலைக்குப்போனா நானும் வேலைக்குப் போவேன், எனக்கும் எக்கனாமிகல் ப்ரீடம் வேணும்லங்கிற கேட்டகிரி இல்ல அது! ஒரு நாள் கல்யாணச் செலவுக்காக ஒரு ஆயுசு முழுக்க வேகாத வெயில்ல வெந்து வெண்ணச்சட்டியா சாகுறது அது! அந்த சீன, உத்துப்பாத்தாத் தெரியும், அவள் எம்புட்டுப் பெரிய பேரழகி, பெருந்தன்மையாழினி, எதற்கும் ஈடில்லாத ஒரு உயிர்(அரை மணி நேரமா இந்த எடத்துல என்ன வார்த்தை போடுறதுன்ன் தடுமாறி, கடுப்பாகி, இதப் போட்டு வச்சிருக்கேன். கண்டிப்பா, இது சரியான வார்த்தை இல்ல!) என்று புரியும்.

அதாகப்பட்டது; எனக்குத் தெரிந்த பெண் என்பதற்கான வரையறை அல்லது எடுத்துக்காட்டுகள் இப்படித்தான் அமைந்தன. பாக்யராஜ் படத்துல வர்ற ஓப்பன் டைப் ஹீரோயின்களோ, அல்லது ரஜினி டயலாக்ல வர்ற அடக்க, ஒடுக்க...... டைப்போ கிடையாது.

தொடரும்......

Saturday, 7 April 2012

10 கமாண்ட்மெண்ட்ஸ்!




1) நாங்கள் இருவரும் குடும்ப வாழ்க்கை என்ற வகுப்பில் இன்று முதல் பதிவு செய்து கொண்டு எங்களது ஆராய்ச்சியை துவங்குகிறோம். 

2) எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் ஆராய்ச்சியையோ ஆராய்ச்சி விலங்கையோ கைவிட மாட்டோமென்று உறுதியளிக்கிறோம்.

3) எங்களுக்குள் கருத்துவேற்றுமைகளையும் அவற்றின் அளவுகளையும் மிகச்சரியாக குறித்துக்கொண்டு அதற்கான தகுந்த மருந்துகளை செலுத்திக்கொள்வோம் என உறுதி கூறுகிறோம்.

4) எங்கள் இருவரின் செல்போன்களின் உரையாடல்களை இன்றுமுதல் பதிந்து கொள்ள அரசிற்கோ மற்ற நிறுவனங்களுக்கோ உரிமை அளிக்கிறோம்(செல்போன் மூலம் செல்லுமிட விவரங்கள் உட்பட).

5) எங்களுக்குளான விவகாரங்கள் எப்போதாவது நான்கு சுவர்களைத் தாண்டி வெளியே வருமாயின், எங்கள் இருவரின் பெற்றோரையும் கீழ் குறிப்பிட்டுள்ள இரண்டு உறவினர்களையும், இரண்டு நண்பர்களையும் இருவர் தரப்பிலிருந்தும் விசாரணைக்கு உட்படுத்தவோ, தண்டிக்கவோ மற்றும் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளவோ அவர்களின் ஒப்புதலோடு நான் இங்கு முன்னிருத்துகிறேன்.


6) நாங்கள் இருவரும் இனி வேறெந்த தலைப்பிலும் வாழ்க்கை ஆராய்ச்சியை மாற்றிக்கொள்ளவோ, சிந்திக்கவோ, ஒப்புக்கொள்ளவோ நேர்ந்தால் எங்களது பேரன் பேத்திகளுக்கு கல்யாணம் முடிந்தபின்பே அதை ஒப்புக்கொள்வோமெனவும் மீறினால் எங்களை செவ்வாய் கிரக புதுக்குடியமர்த்தலில் உபயோகித்துக்கொள்ளலாமென்றும் உறுதி கூறுகிறோம்.

7) பணத்தையோ, வசதியையோ, ஆடம்பர வாழ்க்கையையோ நாங்கள் விரும்பினால் அதற்கான முன்னோடியை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு அவைகளை பெற்றுக்கொள்வோமெனவும் உறுதியளிக்கிறோம்.

8) குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பின்னர் யோசித்து கொண்டிராமல், வங்கிகளில் சம்ர்ப்பிப்பது போல், முன்னரே ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் தயாரித்துக்கொடுத்துவிட்டு அதற்கான ஈட்டுப்பத்திரங்களையும் காட்டி ஒப்புதல் பெற்றே குழந்தை பெற்றுக்கொள்வோம்.

9) அன்னியப் பெண்களையோ ஆண்களையோ எங்கள் குடும்ப உள்நாட்டு விவகாரங்களில் தலையிட விடாமல் எங்கள் இறையாண்மையைக் காக்க பாடுபடுவோம்.

10) நாங்கள் இருவரும் மனமொத்து பிரியும் தருணத்தில் இருவரும் சேர்ந்து தாஜ்மகாலின் அளவு, அழகு மற்றும் மதிப்புள்ள ஒரு கட்டிடத்தை நாங்களே இணைந்து எங்கள் கைகளால் கட்டிக்கொடுத்த பின்பே பிரிந்து செல்வோம். 


பி.கு: இவற்றில் செய்யவேண்டிய மாற்றங்களையோ, சேர்க்கப்பட வேண்டியவைகளையோ அனைவரும் சிரத்தையெடுத்துச் செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்!