Wednesday, 7 December 2011
குருபீடம்!
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றன்
(பாடல்192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு)
English Translation
"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."
Kanniyan Poongundran in Purananuru,
Poem 192 - written in Tamil 2500 years ago
English Translation by Rev. G.U.Pope in Tamil Heroic Poems
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
http:// www.pattukkottaiyar.com/site/
http://astro.temple.edu/ ~dnavanee/PattuKalyan/ biography.html
பிறப்பு வளர்ப்பு குடும்பம்
தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.
எழுத்தாற்றல்
பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1955ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.
கம்யூனிஸ ஆர்வம்
இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.
கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்
விவசாயி
மாடுமேய்ப்பவர்
மாட்டு வியாபாரி
மாம்பழ வியாபாரி
இட்லி வியாபாரி
முறுக்கு வியாபாரி
தேங்காய் வியாபாரி
கீற்று வியாபாரி
மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
உப்பளத் தொழிலாளி
மிஷின் டிரைவர்
தண்ணீர் வண்டிக்காரர்
அரசியல்வாதி
பாடகர்
நடிகர்
நடனக்காரர்
கவிஞர்
பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி (1959)
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
வாரணம் நூறு!
சங்க இலக்கியத்தில் யானைக்கு வழங்கப்பட்ட பெயர்கள் >100
யானை
வேழம்
களிறு -ஆண்யானை
மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
பிடி - பெண்யானை
கரி
வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
அத்தி - (பிங்கல நிகண்டு)
அத்தினி
அதவை - போர் யானை
அரசுவா
அல்லியன்
அனுபமை
ஆம்பல்
ஆனை
யானை
வேழம்
களிறு -ஆண்யானை
மதகரி - மதம் பிடித்த ஆண் யானை.(திவாகர நிகண்டு)
பிடி - பெண்யானை
கரி
வாரணம் - புகர்முக வாரணம் (மணிமேகலை. 7, 115)
அஞ்சனம் - எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை(சூடாமணி நிகண்டு)
அஞ்சனை- எண்திசை யானைகளுள், வடதிசைப் பெண் யானை
அஞ்சனாவதி- எண்திசை யானைகளுள், வடகீழ்த் திசைப் பெண் யானை
சுப்பிரதீகம் - எண்திசை யானைகளுள்,வடகீழ்த் திசை யானை
புட்பதந்தம் - எண்திசை யானைகளுள், வட மேற்றிசை யானை. (தக்கயாகப். 118, உரை.)
வாமனம் - தென்றிசை யானை.(பிங்கல நிகண்டு)
புண்டரிகம் - எண்திசை யானைகளுள், தென்கீழ்த்திசை யானை. (பிங்கல நிகண்டு)
அத்தி - (பிங்கல நிகண்டு)
அத்தினி
அதவை - போர் யானை
அரசுவா
அல்லியன்
அனுபமை
ஆம்பல்
ஆனை
இபம் - திசையிபச் செவி (கலிங். புதுப். 331).
இரதி
இராசகுஞ்சரம் / குஞ்சரம்
இருள்
தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
வல்விலங்கு
மாதங்கம்
உம்பல் - சான்று
உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)
கலபம்
அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)
அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை
உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை
எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)
ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை
ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.
கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.
கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.
ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)
கசேந்திரன் - சிறந்த யானை.
குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.
கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)
ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.
ஓங்கல் - யானை. (அக. நி.)
கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)
கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)
கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).
கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)
கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)
கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)
கருமா -
கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )
கள்வன் - பிங்கல நிகண்டு
களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)
கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)
கஜம் = கெசம்
காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)
கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)
கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)
குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)
கும்பி - (திவாகர நிகண்டு)
குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)
குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).
கைம்மலை - கையை உடைய மலை(அக. நி.)
நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)
கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).
கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)
சத்திரி - யானை. (சங். அக.)
சாகசம் - யானை. (அக. நி.)
சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)
சிந்துரம் - (சூடா.)
சுண்டாலம் - (யாழ். அக.)
சூகை - (அக.நிக)
தந்தாயுதம்
தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).
தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.
தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.
தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை
தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)
திண்டி - (அக.நிக)
தீர்க்கமாருதம் - (யாழ். அக.)
தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)
தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)
துருமாரி - (யாழ். அக.)
துவரிதழ் - (அக.நிக)
துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)
தூங்கல் - (திவாகர நிகண்டு)
தெட்டி - (அக.நிக)
தெள்ளி - (அக.நிக)
நகரகாதம் - (யாழ்.நிக)
நகரசம் - (யாழ்.நிக)
நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)
நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)
நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.
நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)
நூ - (அக.நிக)
நூழில் (சூடாமணி நிகண்டு)
நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
இரதி
இராசகுஞ்சரம் / குஞ்சரம்
இருள்
தும்பு(சென்னைப் பேரகரமுதலி)
வல்விலங்கு
மாதங்கம்
உம்பல் - சான்று
உரலடி - கடுக்கை யுரலடிமீ துற்றானும் (தனிப்பாடல். i, 79, 158)
கலபம்
அருமணவன் - அருமணத் தீவின் யானை. (நன். 275, மயிலை.)
அல்லியன்- தன் குழுவைப் பிரிந்த யானை
உவா - 60வயதுக்கும் மேற்பட்ட யானை
எறும்பி/இறும்பு - (திவாகர நிகண்டு)
ஏந்துகொம்பன் - வளைந்த கொம்பையுடைய யானை
ஒற்றைக் கொம்பன் - ஒற்றைக் கொம்புள்ள யானை.
கொம்பன்யானை - பெரிய கொம்புகளுடைய யானை.
கோட்டுமலை - கொம்புகளுடைய யானை.
ஐராவணம் = நாகாதிபன் = நான்மருப்பியானை = வெள்ளானை = வெள்ளையானை = அப்பிரமா தங்கம்- இந்திரன் யானை, பட்டத்து யானை. (சீவக சிந்தாமணி. 3046, உரை.)
கசேந்திரன் - சிறந்த யானை.
குவலயாபீடம் - கஞ்சன் கண்ணனைக் கொல்லும் படி ஏவின யானை.
கடாசலம் - கடாசல வீருரி போர்த்தவர் (விநாயகபுராணம். சண்முகர். 3)
ஒருத்தல் - ஆண்யானையையும் குறிக்கும்.
ஓங்கல் - யானை. (அக. நி.)
கசம் - (கம்பராமாயணம். திருவவ. 22.)
கடிறு - கடிறுபலதிரி கானதரிடை (திவ். பெரியாழ். 3, 2, 6)
கயம் - கயந்தனைக் கொன்று (திருவாசகம். 9, 18).
கரபம் - ஒருநாற் றந்தக் கரபத்தி னண்ணல் (கந்தபுராணம். அச முகிந. 22)
கராசலம் - கராசலத்தின் வன்றோல் வியன்புயம் போர்த்தாய் (கந்தபுராணம் கந்தவி. 63)
கரிணி - பெண்யானை(பிங்கல நிகண்டு)
கருமா -
கரேணு - (திவாகர நிகண்டு,சூடாமணி நிகண்டு )
கள்வன் - பிங்கல நிகண்டு
களபம் - மதகரிக் களபமும் (சிலப்பதிகாரம். 25, 49)
கறையடி - பொழிமதக் கறையடி (கல்லா. 61, 22)
கஜம் = கெசம்
காட்டியானை - காட்டில் வாழும் யானை. (திவாகர நிகண்டு)
கொலைமலை - கொலைசெய்யும் யானை = போர்கள யானை. பெருமதக் கொலைமலை (கல்லா. 4)
கிரிசரம் - மலையிற் பிறந்த யானை. (திவாகர நிகண்டு)
குஞ்சரம் - குஞ்சரவொழுகை பூட்டி (பதிற்றுப்பத்து. 5, பதி.)
கும்பி - (திவாகர நிகண்டு)
குமுதம் - தென்மேற்றிசை யானை. (பிங்கல நிகண்டு)
குழவி - யானைக்கன்று. ஒருசார் விலங்கின் பிள்ளைப்பெயர். (தொல்காப்பியம். பொ. 575--579).
கைம்மலை - கையை உடைய மலை(அக. நி.)
நடைமலை - நடக்கும் மலையானை. நடைமலை யெயிற்றி னிடைதலை வைத்தும் (கல்லா. 12)
கைமா - பொலம்படைக் கைம்மாவை (பரிபாடல். 11, 52).
கோட்டுமா - கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே (ஐங்குறுநூறு. 282)
சத்திரி - யானை. (சங். அக.)
சாகசம் - யானை. (அக. நி.)
சாமோற்பவை - பெண் யானை (உரி. நி.)
சிந்துரம் - (சூடா.)
சுண்டாலம் - (யாழ். அக.)
சூகை - (அக.நிக)
தந்தாயுதம்
தந்தாவளம் - தந்தாவளசேனை (பாரத. நான்காம். 9).
தள்ளுமட்டம் - பெரிய யானைகளால் தள்ளப்பட்டு நடைபயிலும், யானைக்குட்டி.
தாப்பானை - புதிதாகப் பிடிபட்ட யானையைப் பழக்க, உபயோகப்படுத்தப்படும் பழகிய யானை.
தொடுவை - புதிய யானையைப் பயிற்றும் யானை
தாமம் - யானை. (சூடாமணி நிகண்டு)
திண்டி - (அக.நிக)
தீர்க்கமாருதம் - (யாழ். அக.)
தீர்க்கவத்திரம் - (யாழ். அக.)
தும்பி - (பிங்கல நிகண்டு.), தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பராமாயணம். வாலிவதை. 51)
துருமாரி - (யாழ். அக.)
துவரிதழ் - (அக.நிக)
துவிரதம் - இருகொம் புடைய யானை. (யாழ். அக.)
தூங்கல் - (திவாகர நிகண்டு)
தெட்டி - (அக.நிக)
தெள்ளி - (அக.நிக)
நகரகாதம் - (யாழ்.நிக)
நகரசம் - (யாழ்.நிக)
நதிசரம் - ஆற்றுச்சார்பாகப் பிறந்த யானை.(திவாகர நிகண்டு)
நாகம் - யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பராமாயணம். சித்திர. 2)
நாகவாரிகம் - அரசர் ஏறுதற்குரிய யானை.
நிருமதம் - (பிங்கல நிகண்டு) , மதமொழிந்த யானை. (சதுரகராதி)
நூ - (அக.நிக)
நூழில் (சூடாமணி நிகண்டு)
நெடுங்கை - நெடுங்கைப் பிணத்திடை நின்றான் (பு. வெ. 7, 13).
பகடு - பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் (பு. வெ. 8, 5)
பஞ்சநகாயுதம்
பஞ்சநகம்
பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
பண்டி (அக.நி.)
பவளக்கொம்பன்
பிக்கம்= யானைக்கன்று (யாழ். அக.)
பிணிமுகம்
பிரளயம்
பிள்ளுவம்
பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை
புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)
பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)
புழைக்கை - (திவாகர நிகண்டு)
பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).
பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).
பெருமா - (பிங்கல நிகண்டு)
பென்னை - (சங். அக.)
பேசகி - (சங். அக.)
பேசிலம் - (யாழ். அக.)
பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)
போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)
மகாகாயம் - (யாழ். அக.)
மகாதந்தம் - (யாழ். அக.)
மகாநாதம் - (யாழ். அக.)
மகாமிருகம் - (யாழ். அக.)
மத்தகுணம் - (யாழ். அக.)
மதங்கம் - (யாழ். அக.)
மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)
மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)
மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).
மதமா - (பிங்கல நிகண்டு)
மதவிருந்தம் - (யாழ். அக.)
மதாரம் - (யாழ். அக.)
மதாவளம் - (பிங்கல நிகண்டு)
மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)
மந்தமா - (சூடாமணி நிகண்டு)
மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)
மருண்மா - (திவாகர நிகண்டு)
மறமலி - (திவாகர நிகண்டு)
மா - (அக.நி.)
மாதிரம் - (பிங்கல நிகண்டு)
முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.
மையன்மா - (இலக். அக.)
மொய் - (பிங்கல நிகண்டு)
யாளி - (அக.நி.)
யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)
யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)
யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)
வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)
வராங்கம் - (யாழ். அக.)
வருணம் - (யாழ். அக.)
வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)
வழுவை - (சூடாமணி நிகண்டு)
வியாளம் - கெட்டகுணமுள்ள யானை
விராணி - (சங். அக.)
வேதண்டம் - (பொதி. நி.)
அருணம் - (அக. நி.)
அழுவை - (அக. நி.)
அறுகு - ((பொதி. நி.)
இமழி - (அக. நி.)
உத்தரி - (அக. நி.)
ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)
ஏரம்பம் - (நாமதீப.)
ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)
கரமை - (சங். அக.)
களம் - கொம்பில்லா யானை
கேழல் - (அக. நி.)
சூர்ப்பகன்னம் - (அக. நி.)
பஞ்சநகாயுதம்
பஞ்சநகம்
பட்டத்தியானை - இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை.
பட்டவர்த்தனம் - அரச யானை. பட்டவர்த்தனமாம் பண்புபெற்ற வெங்களிறு (பெரியபுராணம். எறிபத். 11)
பண்டி (அக.நி.)
பவளக்கொம்பன்
பிக்கம்= யானைக்கன்று (யாழ். அக.)
பிணிமுகம்
பிரளயம்
பிள்ளுவம்
பீது - யானைத்திரளின் தலைமைபெற்ற யானை
புகர்முகம் - புலி யொடு பொரூஉம் புகர்முக வோதையும் (சிலப்பதிகாரம். 25, 29)
பூட்கை - பொன்றி வீழ்ந்த புரவிவெம் பூட்கை தேர் (கம்பராமாயணம். முதற்போ. 58)
புழைக்கை - (திவாகர நிகண்டு)
பூழ்க்கை - பூழ்க்கை முகன் மனுவை நனியெண்ணின் (விநாயகபுராணம். 14, 9).
பெருங்கை - பெருங்கைத் தொழுதியின் (பதிற்றுப்பற்று. 76, 6).
பெருமா - (பிங்கல நிகண்டு)
பென்னை - (சங். அக.)
பேசகி - (சங். அக.)
பேசிலம் - (யாழ். அக.)
பொங்கடி- பொங்கடி படிகயம் (அகநானூறு. 44)
போதகம் - போதகமொன்று கன்றி (கம்பராமாயணம். விபீடண. 113)
மகாகாயம் - (யாழ். அக.)
மகாதந்தம் - (யாழ். அக.)
மகாநாதம் - (யாழ். அக.)
மகாமிருகம் - (யாழ். அக.)
மத்தகுணம் - (யாழ். அக.)
மதங்கம் - (யாழ். அக.)
மத்தமா - மத்தம் பிணித்த கயிறுபோல் (கலித்தொகை. 110),(நிகண்டு.)
மத்தவாரணம் - மத்தவாரணம் பிடிகளோடு வாரிதோய் கானி யாறும் (பாரத. அருச்சுனன்றவ)
மதங்கயம் - மதிக்கு மதங்கய மனைய வரக்கன் (சேதுபு. பிரமகத். 7).
மதமா - (பிங்கல நிகண்டு)
மதவிருந்தம் - (யாழ். அக.)
மதாரம் - (யாழ். அக.)
மதாவளம் - (பிங்கல நிகண்டு)
மதி - கோண் மதித்திடர் கிடந்தன(கம்பராமாயணம். நாக பாச. 136)
மந்தமா - (சூடாமணி நிகண்டு)
மந்திரம் - யானை வகைகளில் ஒன்று (சுக்கிரநீதி, 307.)
மருண்மா - (திவாகர நிகண்டு)
மறமலி - (திவாகர நிகண்டு)
மா - (அக.நி.)
மாதிரம் - (பிங்கல நிகண்டு)
முத்துக்கொம்பன் - முத்து நிறமான தந்தமுள்ள யானை.
மையன்மா - (இலக். அக.)
மொய் - (பிங்கல நிகண்டு)
யாளி - (அக.நி.)
யானைத்தலைவன் - யானைக் கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)
யானைமுகவன் - வீரபத்திரக் கடவுள், விநாயகக் கடவுள் (சூடாமணி நிகண்டு)
யூதபம் - தன் கூட்டத்தைக் காக்குந் தலைவன் யானை. (பிங்கல நிகண்டு)
வயமா - வயமாத் தானவாரியும் (கம்பராமாயணம். ஊர்தேடு. 17)
வராங்கம் - (யாழ். அக.)
வருணம் - (யாழ். அக.)
வல்விலங்கு - (பிங்கல நிகண்டு)
வழுவை - (சூடாமணி நிகண்டு)
வியாளம் - கெட்டகுணமுள்ள யானை
விராணி - (சங். அக.)
வேதண்டம் - (பொதி. நி.)
அருணம் - (அக. நி.)
அழுவை - (அக. நி.)
அறுகு - ((பொதி. நி.)
இமழி - (அக. நி.)
உத்தரி - (அக. நி.)
ஊர்வரை - பொன்னூர்வரைதனில் (சிவப். பிரபந். கோடீச்சுர. 241)
ஏரம்பம் - (நாமதீப.)
ஓர்கை - ஓர்கை யுரியான் (கடம்பர். உலா, 364)
கரமை - (சங். அக.)
களம் - கொம்பில்லா யானை
கேழல் - (அக. நி.)
சூர்ப்பகன்னம் - (அக. நி.)
கோனாரின் மாணவனின் உரை!
சென்னைத் தமிழ் அருஞ்சொற்பொருள்!
கொச்சைச்சொல் சரியான சொல்
அட மழை ... அடைமழை
தாவாரம் ... தாழ்வாரம்
முழுங்கு ... விழுங்கு
அவைகள் ... அவை
கடப்பாறை ... கடப்பாரை
கத்திரிக்காய் ... கத்தரிக்காய்
கைமாறு ... கைம்மாறு
கோடாலி ... கோடரி
தலக்காணி ... தலையணை
இடது பக்கம் ... இடப்பக்கம்
புஞ்சை ... புன்செய்
பதட்டம் ... பதற்றம்
நோம்பு ... நோன்பு
ஒருவள் ... ஒருத்தி்
அருகாமையில் ... அருகில், அண்மையில்
அதுகள் ... அவை
வெண்ணீர் ... வெந்நீர்
சிகப்பு ... சிவப்பு
பண்டக சாலை ... பண்டசாலை
புண்ணாக்கு ... பிண்ணாக்கு
ரொம்ப ... நிரம்ப
வத்தல் ... வற்றல்
பேத்தி ... பெயர்த்தி
பேரன் ... பெயரன்
வலது பக்கம் ... வலப்பக்கம்
கடக்கால் ... கடைக்கால்
ஊரணி ... ஊருணி
பாவக்காய் ... பாகற்காய்
சாணி ... சாணம்
திருவாணி ... திருகாணி
சீயக்காய் ... சிகைக்காய்
சுவற்றி்ல் ... சுவரில்
முயற்சித்தார் ... முயன்றார்
எண்ணை ... எண்ணெய்
Subscribe to:
Posts (Atom)
